Skip to main content

கார் மோதியதில் 66 செம்மறி ஆடுகள் உள்பட ஒருவர் பலி

Published on 24/05/2020 | Edited on 24/05/2020

 

கார் மோதியதில் 66 ஆடுகள் உள்பட ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காமராஜ் (வயது 54), கலியமூர்த்தி (வயது 63), ஆயுதகளத்தை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (வயது 37), பெரிய வளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 55) மற்றும் கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45) ஆகியோர் செம்மறி ஆடுகள் வைத்து மேய்த்து வருகின்றனர்.

 

 

நேற்று முன்தினம் மாலை கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடு அருகில் மேய்த்து கொண்டு இருந்தனர். பின்னர் தங்களது கிராமம் தேவமங்களத்திற்கு நடை பயணமாக 180 செம்மறியாடுகளை ஓட்டி கொண்டு வந்து கொண்டு இருந்தனர். இரவு 1 மணியளவில் மீன்சுருட்டி அருகே வெண்ணங்குழி ஓடை, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று காமராஜ் மற்றும் சந்திரசேகர் 66 செம்மறியாடுகளையும் மோதியதில், காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 66 செம்மறியாடுகள் இறந்து போனது. இவர்களுடைய வாழ்வாதாரமே செம்மறியாடுகள் தான் என்று கூறி அழுதனர்.
 

இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 
 

விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் விழுப்புரம் மாவட்டம், அய்யனாத்தூர், ஆர்க்காடு மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜா ( வயது25) என தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

 


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓட்டுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு; கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Sudden illness of the driver; The bus lost control

கும்பகோணத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஜெயங்கொண்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று கும்பகோணம் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை இயங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் நடராஜனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்த கருங்கல் ஜல்லி குவியலில் இறங்கியது. தட்டுத்தடுமாறி நின்ற பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர்.

இந்த விபத்தில் சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஒரு பள்ளத்தில் இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

புளி பறிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கொலையில் முடிந்த சோகம்!

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

ariyalur jayankondam ilaiur samaveli tamarind fruit incident

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் சமவெளி என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கு ராமச்சந்திரன், ராஜேந்திரன், சங்கர் என மூன்று மகன்களும் மணிமேகலை, சசிகலா என இரண்டு மகள்களும் என மொத்தம் ஐந்து பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி அவரவர்க்கு சொத்துக்களை பிரித்துக் கொடுத்து தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் புளியமரத்தில் பழம் பறித்து பங்கு பிரிப்பது சம்பந்தமாக சங்கர் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரனுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சங்கருக்கு ஒதுக்கப்பட்ட புளியமரத்தில் ராஜேந்திரன், அவரது மகன் கவுண்டன், மகள் கவிதா ஆகிய மூவரும் பழம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சங்கர் சகோதரர் ராஜேந்திரனிடம், “எனக்கு சொந்தமான புளியமரத்தில் ஏன் பழம் பறிக்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரும் சங்கரை கடுமையாகத் தாக்கியதால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜேந்திரன், கவுண்டன், கவிதா ஆகிய மூவரையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.