Skip to main content

திரு.வி.க.நகர் மண்டலத்தில் 357 பேருக்கு கரோனா!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

CHENNAI CORPORATION CORONAVIRUS ZONES


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,401 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 31 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
 

CHENNAI CORPORATION CORONAVIRUS ZONES


அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க.நகரில் 357 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராயபுரம்- 299, கோடம்பாக்கம்- 257, அண்ணா நகர்- 144, தண்டையார்பேட்டை- 136, தேனாம்பேட்டை- 206, பெருங்குடி- 12, அடையாறு- 44, திருவொற்றியூர்- 29, வளசரவாக்கம்- 114, ஆலந்தூர்- 10, சோழிங்கநல்லூர்- 10, மாதவரம்- 24, மணலி- 10, அம்பத்தூர்- 67, மற்ற பகுதிகளுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 5 பேர் என மொத்தம் 1,724 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

http://onelink.to/nknapp


இதில் 264 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 18 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற 1,437 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்