Skip to main content

திருமணம் செய்யாமல் ஏமாற்றும் இளைஞர்! காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Cheating young man without getting married! Woman involved in Tarna before police station!

 

நாகையில் வரதட்சணை அதிகம் கேட்டு நிச்சயம் முடித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுக்கும் மாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நிச்சயதார்த்த புகைப்பட ஆல்பத்துடன் மகளிர் காவல் நிலைய வாசலில் பாதிக்கப்பட்ட பெண் அவரது குடும்பத்தினரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்மார்க்கம். இவரின் மூத்த மகளுக்கும், நாகை அடுத்துள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார் விஜயா தம்பதியின் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஜூன் 17ஆம் தேதி திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரவணன் மேற்கொண்டு திருமணத்திற்கான எந்தவித வேலையையும் துவங்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருந்துள்ளார்.

 

இந்நிலையில், நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிச்சயதார்த்த விழா நடத்தினோம் அதோடு, அவசர தேவைக்காக 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவருக்கு கொடுத்தோம், ஆனால் திருமணத்திற்கான எந்த வேலையும் செய்யாமல் எங்களை ஏமாற்றி வருகிறார் சரவணன். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினர் ஏனோ புகாரை வாங்க மறுத்துவருகின்றனர். அதனால் நானும் எங்கள் குடும்பத்தினரும் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றனர்.

 

Cheating young man without getting married! Woman involved in Tarna before police station!

 

தர்னாவில் நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துக்கொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். நிச்சயம் முடிந்து திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.