Skip to main content

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020
Chance of heavy rain in 6 districts of Tamil Nadu

 

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருச்சி, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்லில் நாளை கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சேலம், தருமபுரியிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்