Skip to main content

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வன்கொடுமை சட்டம் பாயுமா? ஆணையத்தின் அதிரடி விசாரணை!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

tn state information commission

 

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருக்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால். தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்தவர். தகவல் ஆணையத்தில் இவரது பணிகள் மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் உண்டு. சுருக்கமாகச் சொல்வதானால், தகவல் ஆணையத்தை ஒரு சிறை போலத்தான் நடத்திவருகிறார்.

 

சமூக ஆர்வலரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளருமான சென்னையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரின் வழக்கு ஒன்று கடந்த மாதம் தகவல் ஆணையத்திற்கு வந்திருக்கிறது. வழக்கின் விசாரணையின்போது, ராஜகோபாலுக்கு எதிரே அமர்ந்திருந்தார் கல்யாண சுந்தரம். அப்போது, ’’உயர் நீதிமன்ற நீதிபதிக்குரிய அந்தஸ்த்தைப் பெற்றவன் நான். என் முன்னால் எப்படி உட்காரலாம்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ராஜகோபால். அதற்கு தனது வயதின் முதுமையைக் காரணம் காட்டிய கல்யாண சுந்தரம், “சீனியர் சிட்டிசனை கௌரவமாக நடத்தணும்னு நீதிமன்றங்களும் அரசாங்கங்களும் சொல்லியிருக்கிறது. அதனால் உட்கார்ந்திருப்பதும் எழுந்து நிற்பதும் என் மனநிலையைப் பொறுத்தது. எழுந்து நிக்கணும்னு கட்டாயப்படுத்தக்கூடாது’’ என்று சொல்லியிருக்கிறார்.

 

உடனே ராஜகோபால், “என் முன்னால கையை நீட்டியெல்லாம் பேசக்கூடாது. உன் தகுதிக்கேற்ப நடந்துக்கணும்’’ என்று சொல்ல, “கையை நீட்டிப் பேசக்கூடாதுன்னு நீங்க யாரு எனக்கு சொல்றது? கையை நீட்டிப் பேசக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? கையை நீட்டிப் பேசறது என் சுபாவம். அதையெல்லாம் நீங்க கேள்வி கேட்க முடியாது. அப்புறம்… தகுதியைப் பத்தி பேசறீங்க. தகுதின்னா என்ன?” என்று கல்யாண சுந்தரம் கோபமாக கேட்டுள்ளார்.

 

அதற்கு ராஜகோபால், “உன் தகுதி என்னென்னு எனக்குத் தெரியும். எல்லோரும் சொல்லியிருக்காங்க’’ என்று கூற, “நான் தாழ்த்தப்பட்டவன்கிற அர்த்தத்தில நீங்கள் பேசறீங்க. இப்படி பேசறது வன்கொடுமை சட்டத்தின்படி குற்றம். மனித உரிமைக்கும் எதிரானது’’ என்றெல்லாம் ஒரு பிடி பிடித்திருக்கிறார் கல்யாண சுந்தரம். இதனால் தகவல் ஆணையத்தில் ஒரே ரகளை நடந்திருக்கிறது. வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வெளியே வந்த கல்யாண சுந்தரம், தனக்கேற்பட்ட அவமானத்தை தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு நேரில் சென்று புகாராக தெரிவித்துள்ளார். தமிழில் கொடுக்கப்பட்ட புகாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, குடியரசுத் தலைவர், பிரதமர், தேசிய மனித உரிமைகள் ஆணையர் என பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் கல்யாண சுந்தரம்.

 

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம். அந்தக் கடிதத்தில், இந்தப் புகார் மீது உடனடியாக விசாரித்து தகவல் தெரிவிக்கவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஐ..ஏ.எஸ்.சிடம் இந்தப் புகாரை அனுப்பி, விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

 

அதன்படி கல்யாண சுந்தரத்தை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார் மணிவாசன். அப்போது ராஜகோபாலால் தனக்கேற்பட்ட அவமானத்தையும், மன உளைச்சல்களையும் விவரித்த கல்யாண சுந்தரம், ஆணையத்தின் விசாரணையின்போது நடந்த அனைத்தையும் சொல்லியிருக்கிறார். மேலும், ’’ராஜகோபால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் நான் சும்மா இருக்க மாட்டேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

 

இதனையடுத்து ராஜகோபாலுக்கு எதிரான வன்கொடுமை புகார் குறித்து விளக்கமளிக்குமாறும், அவரிடம் விசாரிப்பதற்கு அவர் நேரில் வர வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையத்தின் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் மணிவாசன். இது தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. ராஜகோபால் மீது வன்கொடுமை சட்டம் பாயுமா? என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. 

 

இந்த விவகாரம் தகவல் ஆணையத்திலும் பரபரப்பாக எதிரொலிக்க, அவ்வளவு எளிதாக இதனை விட்டுவிடக்கூடாது என உறுதியாக இருக்கிறதாம் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் !

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள்” - திமுக காட்டம்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள். இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய்முகத்தை வெளிப்படுத்தியது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள் :

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழித்து கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி : 

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.

உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே :

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் மேல் விழுந்தது. இதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு வேடிக்கை :

பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதலமைச்சர் பதவிக்கு உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை ஊரும், உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதுடன், யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி. அது மட்டும் அல்ல கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய்முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா? உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிச்சாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அ.தி.மு.க.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி :

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் :

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.

ஒரே நாடு ஒரே தேர்தல் : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே. இப்படித் தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜ.கவிடம் கூட்டணி இல்லை என்று கூறி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.