Skip to main content

வேட்பாளர் மறைவு... மேலுமொரு இடத்தில் தேர்தல் ரத்து!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"Candidate disappears ... no election for this ward"!

 

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தேர்வு நிலைப் பேரூராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று (15/02/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022- ல் வத்திராயிருப்பு தேர்வு நிலைப் பேரூராட்சி வார்டு எண்.2- க்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் படிவம்- ன்படி பதிவு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வார்டு எண். 02- க்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திரு.க.முத்தையா தபெ கருப்பையா (வயது 43) கதவு எண் 184/136, மேலத் தெரு, வத்திராயிருப்பு என்பவர் 14/02/2022 அன்று அதிகாலை 01.10 மணிக்கு இயற்கை எய்திவிட்டார் என்று பதிவாளர் (பிறப்பு மற்றும் இறப்பு) அரசு மருத்துமனை வத்திராயிருப்பு அவர்களால் இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளது. 

 

அதன் அடிப்படையில் மேற்கண்ட வார்டு எண்.02- க்கான பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேர்தல் விதி 34 (1) (C) தமிழ்நாடு நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின்படி வத்திராயிருப்பு 2006 தேர்வுநிலைப் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரால் ஒத்திவைக்கப்படுகிறது". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்