Skip to main content

பத்திரிகையாளர்களைத் தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்; அ.தி.மு.க பொதுக்குழுவில் பரபரப்பு (படங்கள்)

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து தொண்டர்களுடன், செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டுள்ளனர். இந்நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை பவுன்சர் வாசலிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் அங்கு பவுன்சர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்