Skip to main content

விநாயகர் ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக போன்ற அமைப்புகள் திட்டமிட்டுள்ளது-முத்தரசன்

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன்.. மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது.  தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில்  சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் முன்னெடுத்து வருகிறது.

 

பாஜக தேசிய செயலாளர் புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் அருகே நடந்த  விநாயகர் ஊர்வலத்தில் காவல்துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்க தக்கது. அவர் மீது உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

 

mutharasan

 

பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் மாணவியை கைது செய்து சிறைக்கு அனுப்பியது காவல் துறை. ஆனால் கலவரத்தை தூண்டும்விதாக பேசிய எச்.ராஜாவிடம் சமாதானம் செய்யும் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டரின் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்துக்களை தடுப்பதாவும் நானும் லஞ்சம் தருகிறேன் என்று பேசியதுடன் நீதிமன்றத்தையும் தரம் தாழ்ந்து பேசியுள்ள ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும்.

 

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால்  தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே  இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் நேற்றைய கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதமதபடுத்தும் முயற்சியாகும். அதாவது மாநில அரசு போட்ட தீர்மானம் தாமதமாக கிடைத்தது என்று ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு சொல்கிறது. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் தீர்மானம் போட்ட அன்றே அனுப்பிவிட்டோம் என்கிறார் இதில் யார் சொல்வது பொய் என்பதை அமைச்சரும் தமிழக அரசும் விளக்க வேண்டும்.

 

டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சிறைச்சாலையில் கைதிகளின் உல்லாச வாழ்க்கை குறித்த சர்ச்சைக்கு பதில்  அளித்த அவர் கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு நாங்கள் மாதம் 5லட்ச ருபாய் வழங்க வேண்டும் ஆகையால் நீங்கள் பணத்தை கொடுத்துவிட்டு உல்லாசமாக இருங்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல்  செய்து வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கைவைத்து விடுவார் என்று தான் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபட்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்ச கட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐநா விசாரணை நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்ற படுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை திமுக ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் அவர்கள் ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன் இது நாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 

 

தற்போதைய தமிழக அரசில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள்  உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால்அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்க கூடாது என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நடிக்கும் அரிசி பட அப்டேட்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
communist party leader mutharasan movie arisi update

எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா. முத்தரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் அரிசி. முதல் முறையாக அவர் நடிக்கிறார். இதில் சமுத்திரக்கனி, சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையாராஜா இசையமைக்கிறார். இப்படம் அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை மையப்படுத்தி உருவாகிறது. இதில் விவசாயி கதாபாத்திரத்தில் முத்தரசன் நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து படப்பிடிப்பும் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.