Skip to main content

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

bike and car incident in madurai district highway

 

மதுரை மாவட்டம், பாலமேட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மனைவி மற்றும் பேத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேலக்கால் பகுதியில் வேகமாக சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஆறுமுகத்தின் மனைவி பழனியம்மாள், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

 

படுகாயமடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது பேத்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

விபத்து குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்