Skip to main content

வீச்சரிவாளுடன் வாழ்த்து பதாகை... ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

banner with the sword ... Case against the soldier!

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வீச்சரிவாளுடன் திருமணத்திற்கு வாழ்த்துப் பதாகை வைத்த ராணுவ வீரர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

ராணுவத்தில் பணியாற்றிவரும் வடமலாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சங்கரன்கோவிலில் நடைபெற்ற உறவினர்களின் திருமணத்திற்கு வந்த நிலையில், அவர் மணமக்களை வரவேற்பது போன்று ஃப்ளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ராணுவ வீரர் சுரேஷ் வீச்சரிவாளுடன் நிற்கும் படம் இடம்பெற்றிருந்தது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும்விதமாக இந்த வாழ்த்து பேனர் இருந்ததாக போலீசாருக்கு இதுகுறித்து தகவல் போக, வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்த ராணுவ வீரர் சுரேஷ், அதை அச்சிட்ட கிருஷ்ணா ப்ரிண்டர்ஸ் உரிமையாளர் சங்கரநாராயணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து, சர்ச்சை பேனர் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்