Skip to main content

அடுத்தவர் ஆயுளை கணித்த ஜோதிடர் தற்கொலை

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

"இந்த ஜாதக ராசிப்படி செல்வ செழிப்பு குடும்பத்தில் பெருகும்.. இரண்டு ஜாதக பொருத்தத்தின் படி திருமண பொருத்தம் சூப்பர் ஜோடி தான்" இப்படித்தான் ஜோதிடர் அருணாச்சலம் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் அசத்தலாக பேசுவார். அவரிடம் ஜோதிடம் பார்க்க ஈரோட்டில் கூட்டம் குறைவில்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஜோதிடர் அருணாச்சலம் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடன் சுமையை தீர்க்க வழி சொல்லுங்கள் என ஏராளமான பேர் அவர்களின் ஜோதிடத்தை கொடுத்து கேட்டபோது உங்களுக்கான கஷ்டம் இன்னும் ஓரிரு மாதம் தான் அதன் பிறகு மற்றவர்களுக்கு கடன் நீங்கள் கொடுப்பீர்கள் என கூறிய ஜோதிடர் அருணாச்சலம் அவருக்கு ஏற்பட்ட கடன் சுமையால் தான் தற்கொலை செய்துள்ளார் என்பது பரிதாபம்.

 

erode

 

ஈரோடு அகில் மேடு முதல் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலத்திற்கு வயது 67.  அருணாச்சலம் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள்  பணத்தை திருப்பி கேட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் சில காலமாக தவித்து வந்துள்ளார். மன வேதனையில் இருந்து மீள முடியாமல்  தற்கொலை செய்துள்ளார். இவரிடம் ஜாதகம் பார்க்க வந்தவாடிக்கையாளர் ஒருவர் "பாருங்க கொடுமையை... திருமணம், குழந்தை பாக்கியம், கடன் சுமையால் குடும்ப கஷ்டம், குறிப்பாக எவ்வளவு காலம் ஆயுள் உள்ளது என்பதையெல்லாம் இவர் சொல்வது அப்படியே நடக்கும் என நம்பிக்கையுடன் தான் இவரிடம் ஜாதகம் பார்ப்போம், எங்களுக்கு ஆயுள் ரேகையை பார்த்து 80 வயது, 90 வயது கெட்டி என்று கூறியவருக்கு அவரின் ஆயுள் என்ன என்பது தெரியாமல் போய் விட்டதே..." என்றனர். 

 

 

ஜோதிடம்,ஜாதகம், ராசி பலன் எல்லாம் அவரவர் நம்பிக்கை சார்ந்ததுதான் என்பதை ஜோதிடர் அருணாச்சலம் தனது இறப்பின் மூலம் உணர்தியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.