Skip to main content

திருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

அழகிரி தனது அடுத்தஅரசியல்நிகழ்வாக இடைத்தேர்தல் நடக்க இருக்கும் திருவாரூருக்கு நாளை 23ம் தேதி வருகிறார்.  அதற்கான ஏற்பாடுகளை தனது ஆதரவாளர்கள் சிலர் கவனித்துவருகின்றனர். அழகிரியின் வருகை பலரையும் ஆச்சர்யத்துடன் கூடிய எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

 

alagiri

 

நாளை திருவாரூர் வரவிருக்கும் அழகிரி காட்டூரில் இருக்கும் தனது பாட்டியின் சமாதிக்கு சென்று மறியாதை செய்கிறார். பிறகு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செய்துவிட்டு தெற்கு வீதியில் இருக்கும் ஏகேஎம் திருமணமண்டபத்தில் தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன் பி்ன்னர் அங்கு தனது ஆதரவாளர்களை தனிமையில் சந்தித்து பேசுகிறார். அங்கு தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஆதரவை பொறுத்தே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்கிற முடிவில் இறங்க இருக்கிறாராம்.

 

திமுக தலைவர் கலைஞரின் சொந்த தொகுதியனா திருவாரூர் அவர் மறைவையடுத்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட மு.க.அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவிக்கிடந்தன. கலைஞர் உயிரோடு இருக்கும்வரை திருவாரூருக்கு வராத அழகிரியின் திடிர்வருகையின் மூலம் அந்தபேச்சுக்கு முற்றுப்புள்ளிவைக்க இருக்கிறது.

 

கலைஞரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை கடந்த  2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை அழகிரி முயன்றும் மீண்டும்அவரால் திமுகவில் இணையமுடியவில்லை.
   
கடந்தமாதம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புகாரணமாக கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் வேகவேகமாக சென்னைக்கு வந்தார்.  கலைஞரின்  இறுதிநிகழ்ச்சிவரை ஸ்டாலினோடு இனைந்தே ஒவ்வொருநிகழ்விலும் இருந்தார்.பிறகு கலைஞர்இறந்தமூன்றாவதுநாளே திமுகதொண்டர்கள் அனைவரும் எனக்கு பின்னால்இருக்கிறார்கள் என ஒருபோடுபோட்டார். 


அதோடு நிற்காமல் செப்டம்பர் 5 ம்தேதி சென்னையில் தனது ஆதர்வாளர்களோடு ஊர்வலம் போவதாக அறிவித்து அதில் 1 லட்சம் பேர் கலந்துகொள்ளுவார்கள் என அறிவித்து, ஊர்வலத்திற்கு சொன்ன அளவில் கூட்டத்தை காட்டாமல் புசுவானமாகினார்.


பிறகு தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் தயாராக இல்லை. இந்த சூழலில்  28 ஆம் தேதி   திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின்  தலைவரானார் ஸ்டாலின். அதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கும், கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்றுவிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுவிட்டே சென்றிருக்கிறார். 

 

இதற்கிடையில் அழகிரி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதற்கு டி.டி.வி தினகரனிடம் ஆதரவு கேட்டதாகவும் திருப்பரங்குன்றம் தொகுதியில்  டிடிவி அணியினருக்கு அழகிரி ஆதரவு அளிப்பதாகவும்,   செய்திபரவிக்கிடக்கின்றன. இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் திருவாரூர் தொகுதியில் தனக்கு உள்ள செல்வாக்கு எப்படி என்பது  குறித்து அறிந்து கொள்ளவே அழகிரி  வருகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

அவரது ஆதரவாளர் ஒருவரிடம் விசாரித்தோம், ‘’ எங்களுக்கு தனிப்பட்ட ஆதரவு என்பது குறைவுதான். நன்னிலம் பகுதியில் திமுக மா.செ பூண்டிகலைவாணன் மீது உள்ள அதிர்ப்தியால் சிலர் உள்ளனர்.  அவர்களைதான் சென்னையில் நடந்த ஊர்வலத்திற்கும் பஸ் பிடித்து அழைத்து சென்றோம், அவர்களை தான் அழகிரி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கும் அழைத்துவரவுள்ளோம், அழகிரியும் ஸ்டாலினும் ஒன்றாகவேண்டும் என்கிற கோரிக்கையைதான் அவரிடம் வைக்க இருக்கிறோம். ’’என்றனர். எது எப்படியோ திருவாரூரிலும் அழகிரியின் சாயம் வெளுக்க போகிறது என்கிறார்கள் திமுகவினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.