Skip to main content

"தேசிய நெடுஞ்சாலையுடன் அரியலூர் ரயில் நிலையத்தை இணைக்க வேண்டும்"- பொது மக்கள் கோரிக்கை!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

அரியலூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு சுமார்  90 ஆண்டுகள் ஆகின்றன. இதன் வழியாக வைகை, பல்லவன், ராக்போர்ட், மங்களூர் , குருவாயூர், உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களும், பல பேசஞ்சர் ரயில்களும் செல்கின்றன. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

 

 Ariyalur Railway Station is connected to the National Highway- Public demand

 

 

இந்நிலைியில் அரியலூர் ரயில் நிலையம் அருகே  100 மீட்டர் தொலைவில் செல்லும், 100 அடி அகலம் உள்ள தஞ்சாவூர் - பெரம்பலூர்  தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அகலமான புதிய சாலை அமைத்து நேரடியாக தேசிய நெடுஞ்சாலையுடன் அரியலூர் ரயில் நிலையத்தை இணைத்து போக்குவரத்தை மேம்படுத்த  வேண்டுமென்று  பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரியலூருக்கு வரும் ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.       

 
 

சார்ந்த செய்திகள்