Skip to main content

"கல்வி கடன்" பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ! 

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

இந்தியா முழுவதும் மாணவர்கள் எளிதாக "கல்விக்கடன்" பெறும் வகையில் மத்திய அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தொடங்கியுள்ளது. இந்த இணைய தள சேவையை "NSDL" நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கான இணையதள முகவரி : 
https://www.vidyalakshmi.co.in ஆகும். இந்த இணைய தளத்தை பயன்படுத்தி கல்விக்கடன் பெற விரும்புவோர் தனக்கென்று நிரந்தர கணக்கை உருவாக்க வேண்டும். இதில் மொபைல் எண் , ஈமெயில் முகவரி , மாணவர் பெயர் , தந்தை பெயர் உள்ளிட்டவை குறிப்பிட்டால் "USER NAME" மற்றும் "PASSWORD" கிடைக்கும்.
 

online application



அதனை தொடர்ந்து மாணவர்கள் "Log in" செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து " SUBMIT " செய்ய வேண்டும். இதில் குறிப்பாக தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பின்பு எந்த துறையை சார்ந்த படிப்பு , எத்தனை வருட படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு "Application No" குறுந்தகவல் வரும். அதன் பிறகு கல்வி கடன் விண்ணப்பித்தற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். விண்ணப்பத்தின் நிலையை அறிய இதே இணையதளத்திற்கு சென்று "Login" செய்து மனுவின் நிலையை அறியலாம். 

அதனை தொடர்ந்து விண்ணப்பம் சமந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு இணையதளம் மூலம் அனுப்படும். பிறகு வங்கி அதிகாரி கல்விக்கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார். பின்பு வங்கி அதிகாரியை சந்தித்த பின் கல்வி கடன் வழங்குவது தொடர்பான முடிவை "Vidyalakshmi" என்ற இணையதள அதிகாரிக்கு தகவல் வழங்குவர்.

 

online loan



இதற்கான முழு தகவலும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈமெயிலுக்கு வங்கி அதிகாரி அவ்வப்போது தகவல் வழங்குவார். எனவே மாணவர்கள் தங்கள் தொலைபேசி எண்ணுடன் பெற்றோர் தொலைபேசி எண்ணை வழங்குவது சிறப்பு. இந்த இணையதளம் மூலம் வங்கியில் ஏறி அலைவது மற்றும் அலைச்சல் தேவையில்லை. மேலும் கல்விக்கடன் சமந்தப்பட்ட வங்கிகள் வழங்கவில்லை எனில் இந்த இணையத்திலேயே புகார் அளிக்கலாம். தேசிய மயமாக்கப்பட்ட சுமார் 36 வங்கிகள் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.