Skip to main content

நெல்லை கடையநல்லூர் காட்டில் உலாவும் அனகோண்டாக்கள்...!!

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

ரத்தத்தை உறையவைக்கும் அடர்ந்த அமேசான் மற்றும் ஆப்ரிக்ககாடுகளில் திரிவதும், அபூர்வமானதும் பயங்கரமான ஆள் விழுங்கி மலைப்பாம்பு அனனோண்டா. அதுபற்றிய மேற்கத்திய திரைப்படம் வெளி வந்தபோதுதான் அதன் மகாபயங்கரம் கண்டு மனிதகுலம் அச்சத்தில் உறைந்தது. தன் எதிரி எவ்வளவு தூரம் ஓடினாலும், உச்சத்திற்குப் போனாலுமே நொடியில் வளைத்து விடக் கூடிய பல அடிகள் நீள சைசும், பனைமரத்தின் அடிப்பாக கனமும் கொண்டவைகள் அனகோண்டாக்கள்.

 

snake

 

அந்த சைஸ் அனகோண்டா நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் மலைக்காடுகளில் திரிவதை தற்செயலாக அங்குசென்ற இளைஞர்கள் அதைக் கண்டு பதறியிருக்கிறார்கள். அப்படியே அதை தங்களின் செல்லின் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

 

கடையநல்லூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சிமலை உள்ளது. அதன் அடிவாரத்திலிருப்பது பெரியாற்றுப்படுகையின் பக்கமுள்ளது  கல்லாறு கிராமம். இந்தக் கிராமத்தின் மேல்புறம் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பீட்டில் வரும் மூங்கில் காடு உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியைக் கொண்ட அடர்ந்த இந்தக் காட்டில் தேக்கு மரங்கள் அடுத்து மான், மிளா, காட்டெருமைகள், பாம்புகள் போன்ற வனவிலங்குகளும் உள்ளன.

 

snake

 

இந்த பீட்டின் அடிப்பகுதியில் கல்லாற்றைச் சேர்ந்தவர்கள் விவசாயம் செய்ய, குளிப்பதற்காகச் செல்வதும் உண்டு. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் பகுதியின் இளைஞர்கள் சிலர். கல்லாறு மலைக்கு  சென்றுள்ளனர். அது சமயம் அவர்கள் அங்குள்ள ஓடையைக் கடக்கும் போது சுமார் 20 அடி நீளம் கொண்ட கணிப்புக்கும் எட்டாத கனம் கொண்ட சைசில் மலைப் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்து பின் வாங்கியுள்ளனர். பின் அதை தங்களின் செல் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சில நிமிடங்களுக்குப் பின்னர், தலையும், வாலும் தெரியாத அந்த மலைப்பாம்பு நெளிந்து செடிப் புதருக்குள் மறைந்திருக்கிறது.

 

snake

 

இந்தக்காட்சி நண்பர்கள் மூலமாக வாட்ஸ் அப்பில் பரவியதையடுத்து அலர்ட் ஆன வனத்துறையினர் கல்லாறு மற்றும் மலையடிவாரக் கிராமங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். நாங்கள் ஓடைப் பக்கம் வரும் போது சாலையில் ஸ்பீடு பிரேக்கர் தான் இருக்கிறதோ என்று சந்தேகப்பட்டு நின்று கவனித்தபோது பளபளப்பான அது நெளிந்தது தெரிய வந்தபோது தான், மலைப் பாம்பு என்று உணர்ந்து பதறினோம் பிறகு தைரியமாக அரிவாளுடன் பின் தொடரும் போது அது புதருக்குள் போய் விட்டது. ஆங்கிலப் படங்களில் பார்க்கிற அச்சு அசல் அனகோண்டா பாம்பு போன்று தெரிகிறது. அருகில் ராஜநாகம் ஒன்று படமெடுத்ததையும் வீடியோ செய்துள்ளோம் என்கிறார்கள் இளைஞர்கள் பீதி விலகாமல். அனகோண்டாக்களையும், ராட்சத மலைப் பாம்புகளையும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் அமேசான் காடுகளுக்கு நிகராகியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.