Published on 10/10/2019 | Edited on 10/10/2019
#ரஜினி_பயத்தில் திமுக என்பது ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
விவகாரம் இதுதான்- கடந்த 20-9-2019 அன்று மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலுள்ள அரசுப் பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி புதுபித்தது. அதனைத் திறந்து வைத்தார் மாவட்ட செயலாளரான சந்தானம். இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை.
![actor rajini makkal mandram reconstruction in chennai govt school](http://image.nakkheeran.in/cdn/farfuture/O9qRkaBgzqvD5Yzc-1JPxeOmypXSuPgOCeiOxAdC_w8/1570682346/sites/default/files/inline-images/rajini2222.jpg)
அந்தக் கல்வெட்டு மாயமானது. கல்வெட்டைப் பெயர்த்தெடுத்தவர்கள் திமுகவினர்தான் என்று கருதிய ரஜினி ரசிகர்கள், அந்த வேகத்தோடு ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கிவிட்டனர். சின்னதாக ஒரு நூல் கிடைத்தாலும் அதைப் பிடித்தபடி முன்னேறுவதுதானே அரசியல்! கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே ரஜினி ரசிகர்களும் ‘அரசியல்’பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
![actor rajini makkal mandram reconstruction in chennai govt school](http://image.nakkheeran.in/cdn/farfuture/c9CWnuDuUjD6KydmFobSlJMMDGfZ5Lko1_xlHYbu3ck/1570682406/sites/default/files/inline-images/500X300_44.jpg)