Skip to main content

“தீட்சிதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பத்திரிகையாளர்கள் மனு!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

"Action should be taken against Dixit" - Journalists petition

 

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து மனு அளித்தனர்.

 

அந்த மனுவில், சிதம்பரம் நடராஜ கோவிலில் நடைபெறும் தேர்  மற்றும் தரிசன விழாவில் பத்திரிகையாளர்கள் தெற்கு வீதியில் உள்ள  சாரதராம் கட்டிடத்தின் மாடியில்  இருந்து தேரோட்டத்தை புகைப்படம் வீடியோ எடுக்கவும், தரிசன விழாவின் போது  கிழக்கு கோபுர வாயில் அருகில் உள்ள கிணற்றுப் பகுதியில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர் மற்றும் தரிசனம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  

 

அதனடிப்படையில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் தூரத்திலிருந்து சாமியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை  வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் 20-ந்தேதி  நடைபெற்ற தரிசனவிழாவில் பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கப்பட்ட கிணற்றடி பகுதியில் பத்திரிகையாளர்கள்  படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டிருந்த போது  தீட்சிதர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் உங்களை கோவிலைவிட்டு வெளியேற சொல்லியுள்ளார். புகைப்படம் வீடியோ எடுக்ககூடாது வெளியே செல்லுங்கள் என பக்தர்கள் மத்தியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் தகராறு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து தீட்சிதர் ஒருவர் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருக்கும் தரிசன விழாவில் ஒலி பெருக்கி மூலம் மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பத்திரிக்கையாளர்களை வெளியேற தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் கூறிக்கொண்டே இருந்தார். இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட,  ஒலி பெருக்கிமூலம் செய்தியாளர்கள் குறித்து ஒருமையில் பேசிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனு கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்த புகார் தமிழக முதல்வர், இந்து அறநிலையத்துறை அமைச்சர், தமிழக காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்றம் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டு உள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.