Skip to main content

செய்யாதுரை வீட்டில் ரெய்டு.. கணக்கில் வராத 500 கோடி ரூபாய் பறிமுதல்!

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

500 crore rupees seized from AIADMK contractor!

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அலுவலகம், அதன் உரிமையாளர் செய்யாதுரையின் வீடு, அவரது மகன்களின் வீடு என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

அருப்புக்கோட்டையில் ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடு மற்றும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடத்தி வந்த நிலையில், இந்த சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனையில் பல்வேறு ஆவணங்கள், கணிப்பொறிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்