Skip to main content

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு!

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

5 layer security in Chennai ahead of Republic Day celebration

 

நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் நாளை மறுதினம்(26 ஆம் தேதி) 74வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி நாடு முழுவதும் உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. 

 

அந்த வகையில், சென்னையில் தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை காமராஜர் சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியை ஏற்றி சிறப்பிக்கவுள்ளார். அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட சென்னையின் முக்கியமான இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 6,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்கள் சென்னையில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்