நாகை மீனவர்கள் 4 பேர் கைது!
இலங்கையின் பருத்திதுறை கடல்பகுதியில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வேதாரண்யத்தை சேர்ந்த கபிலன், ராமசாமி, கோவிந்தசாமி மற்றும் தேவராயன் ஆகியோரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.