Skip to main content

நாமக்கல்லில் பிடிபட்ட மூவாயிரம் கிலோ "குட்கா";போலீஸ் தப்பவிட்ட சேலம் வியாபாரி!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் மோகனூரில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

நாமக்கல் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பரமத்தி வேலூர் பகுதியில்  டி.எஸ்.பி. ராஜு  தலைமையில், காவல் ஆய்வாளர் லட்சுமணகுமார், போலீஸாருடன் வேலூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இரண்டு மினி ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோக்களில் போதை வஸ்துகளாக பயன்படுத்தப்படும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் போல இருந்ததால், உணவு பாதுகாப்பு அலுவலரை வைத்து சோதனை செய்தனர் அந்த பொருட்கள் போதைக்காக பயன்படுத்தும் குட்கா என்று தெரியவந்தது.

 

 3,000 kg of "Kudka" police caught in Namakkal

 

ஆட்டோவில் இருந்தவர்களை  கைது செய்து சுமார் ஆயிரத்து மூன்னூறு  கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினார்கள். காவல் நிலையத்தில் அவர்களை விசாரணை செய்ததில்  மதன்குமார் (24), விக்னேஷ் (28) முத்துக்குமார் (39), என தெரியவந்தது.  குட்கா போதைப்பொருளை பரமத்தி வேலூரைச் சேர்ந்த தீனதயானள் மற்றும் ஜெகன் என்பவர்கள் வேனில் ஏற்றி வேலூர் மற்றும் கரூர் பகுதிகளில் கடைகளுக்கு சப்ளை செய்ய அனுப்பி வைத்ததாகவும், மோகனூர் பாலப்பட்டியில் அவர்களது குடோன் ஒன்று இருப்பதாகாகவும் தெரியவந்தது. உடனடியாக மோகனூர் காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் போலீஸ் படையுடன் சென்று பாலப்பட்டியில் குடோனில் இருந்த புகையிலை குட்கா பொருட்கள் சுமார் இரண்டாயிரம்  கிலோவை கைப்பற்றிறினார்கள்.  இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அங்கு இருந்த விஜய் (எ) ராமலிங்கம் என்பவரை கைது செய்தனர்.  மேற்கண்ட இரண்டு வாகனங்கள் மற்றும் குடோனில் இருந்து மொத்தம் மூவாயிரம் கிலோ புகையிலை குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ருபாய் இருபது லட்சமாகும்.

 

 3,000 kg of "Kudka" police caught in Namakkal

 

 3,000 kg of "Kudka" police caught in Namakkal

 

பரமத்திவேலூர், மோகனூர் , கரூர் பகுதிக்கு குட்கா பொருட்கள் சப்ளை செய்வது சேலத்தை சேர்ந்த ஒரு வட மாநில மார்வாடி வியாபாரி என்பதும் அந்த மார்வாடி வியாபாரி சேலம் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்  என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தாலும் அந்த மார்வாடி வியாபாரி மீது எந்த வழக்கும் போடவில்லை போலீஸ் . சேலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊராச்சே பிறகு எப்படி போலீஸ் அடுத்த நடவடிக்கைக்கு போகும்? என நம்மிடமே கேள்வி கேட்டனர் நாமக்கல் போலீசார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.