Skip to main content

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

 30 injured in Thachankurichi Jallikattu

 

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறக் காத்திருக்கின்றன.

 

பாதுகாப்பிற்காக வாடிவாசல் பகுதியிலிருந்து குறிப்பிட்ட பகுதி வரை மணல், தேங்காய் நார் உள்ளிட்டவை கொட்டப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு முறையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது வரை 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இதுவரையில் 240 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது வரை 30 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சார்ந்த செய்திகள்