Skip to main content

ஓடாத ஜீப்பிற்கு 1.25 லட்சம் டீசல்: ஆட்டையப் போட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம்..!!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

காயிலான் கடைச்சரக்காய் இருக்கும் பேருந்துகள் தவிர்த்து, சரி பாதிக்கு மேல் பணிமனைகளுடன் பேருந்துகளும் அடமானத்தில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகமே நஷ்டமான வேளையில் கூடுதலாய் ஓடாத ஜீப்பிற்கு ரூ.1.25 லட்சத்திற்கு டீசல் போட்டதாய் கணக்குக் காண்பித்து ஆட்டையப் போட்டுள்ளனர். பணிமனையிலுள்ள அதிமுக-வினர் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.

 

1.25 lakh diesel for jeep running: State Transport Corporation



 
திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று கிளைகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி நகர், புறநகர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திசையன் விளை, வள்ளியூர், நெல்லை தாமிரபரணி, நெல்லை புறநகர், கே.டி.சி.நகர், சேரன்மகாதேவி கூனியூர், பாபநாசம், தென்காசி மற்றும் செங்கோட்டை என பல பணிமனைகள் உள்ளன.

 

 


இதில் புளியங்குடி பணிமனைக்கு சொந்தமான ஜீப் TMN 6903ல் தான் ஊழலே நடந்துள்ளது. இந்த புளியங்குடி பணிமனையில் நகர் மற்றும் புறநகரில் சுமார் 55 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கிளை மேலாளர், பொறியாளர், அலுவலக ஊழியர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் என 400க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வேலைக்குப் போகாமலே கட்சி வேலையை கவனித்து வருவதாக பணிக்கு வராமலே ஓ.பி.அடிப்பதும் உண்டு. பெரும்பாலும் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது இந்த விவகாரம். ஆனால் இந்த பணிமனைக்கு சொந்தமான TMN 6903 ஜீப் கடந்த டிசம்பரிலே காலாவதியான, பயன்பாட்டிற்கு உதவாத ஜீப் என முத்திரைக் குத்தப்பட்டு நெல்லை கே.டி.சி.நகரிலுள்ள பணிமனையில் கிடப்பில் போடப்பட்டிருக்க, அதற்கு டீசல் போடப்பட்டதாக ரூ.1.25 லட்சம் செலவானதாக ஆட்டையப் போட்டது தான் அதிமுக-வினரையும், கிளை அதிகாரிகளையும் கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது.


 

1.25 lakh diesel for jeep running: State Transport Corporation



 
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் கணேசனிடம் பேசினோம்., "ஓடாத ஜீப்பிற்கு டிரைவராக புளியங்குடியை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த டிரைவர் ராஜ்மோகன் செயல்படுகின்றார் என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கையெழுத்திடும் டூட்டி சார்ட்டில் பார்த்தேன். டூட்டி சார்ட்டில் அவருடைய எண்ணான 7893ஐ குறிபிட்டு, அந்த ஜீப்பில் தான் டிரைவராக இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 


ஆளுங்கட்சிக்காரங்க இந்த மாதிரி இருப்பது வழக்கமான ஒன்று என்றாலும், அப்ப அந்த ஜீப்பின் நிலை என கண்டறிய ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள்ளான டூட்டி சார்ட்டை ஆர்.டி.ஏ. மூலம் கேட்டேன். புளியங்குடி கிளைக்குக் கேட்டதிற்கு பதில் சங்கரன்கோவில் கிளைக்கு பதில் தந்தார்கள். தொடர்ந்து விடாமல் கேட்க இப்பொழுது பதில் வந்துள்ளது. ஓடாத அந்த ஜீப்பிற்கு ரூ.1.25 லட்சம் டீசல் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவே இப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்..?" என நம்மை அதிர வைத்தார் அவர்.
 

ஊழலில் திளைத்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தினை மீட்பர் யார்..?


 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.