Skip to main content

10ம் வகுப்பு மாணவனை மயக்கி சென்னையில் குடும்பம் நடத்திய ஆசிரியை கைது!

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

 

gg

 

10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி வந்து சென்னையில் குடும்பம் நடத்தி வந்த ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
 

கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியை மரியா. 40 வயதான இவர், தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். கணவரை பிரிந்து வாழும் இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில், மரியா பணிபுரியும் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் ஒரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வகுப்பு முடிந்த பிறகும், அந்த மாணவனிடம் அவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். 
 

மாணவனிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால், மாணவனுக்கு செல்போன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் அந்த ஆசிரியை. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி பழகியுள்ளனர்.
 

இவர்கள் பேசுவதை ஆசிரியை - மாணவன் என்ற கண்ணோட்டத்திலேயே அனைவரும் பார்த்தார்கள். யாரும் சந்தேகப்படவில்லை. இந்நிலையில், கடந்த 23ம் தேதி மாணவனை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.
 

மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மாணவன் பயின்று வந்த பள்ளியிலும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மரியாவும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார் தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வந்தனர்.
 

ஆசிரியையின் செல்போன் சிக்னலை வைத்து ஆசிரியையும், மாணவனும் சென்னையில்தான் உள்ளனர் என்பதை கேரள போலீசார் கண்டுபிடித்தனர். 


தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய கேரள போலீசார், சென்னை சூளைமேடு வந்து ஆசிரியை பெரோனாவை கைது செய்து மாணவனை மீட்டனர்.
 

கேரள போலீசாரின் விசாரணையில், தாய் - மகன் என்று கூறி, சூளைமேட்டில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். 
 

பின்னர் ஆசிரியையை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் போலீசார். ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார். மாணவன் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைப்பட்டான்.

 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.