மக்களவை தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று வரை கணக்கில்வராத சுமார் 107 . 24 கோடி மதிப்பிழான பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் தற்போது வெளியீட்டு புது பட்டியலில் தமிழகத்தில் கணக்கில்வராத சுமார் 41.44 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் , வெள்ளி பொருட்கள் , மற்ற பொருட்கள் உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 112. 47 கோடியை பறிமுதல் செய்ததாக தற்சமயம் இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியீட்டுள்ளது.
இதனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணம் புழக்கம் அதிகம் என்பது குறிப்பிப்பிடத்தக்கது. இந்நிலையில் கணக்கில்வராத பணம் பறிமுதலில் உத்தரபிரதேசம் சுமார் 108.61 கோடி மதிப்பிழான பொருட்கள் பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம். அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஆந்திர பிரதேசம் சுமார் 103.4 கோடி மதிப்பிழான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்தது என இந்திய தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்தது. இந்தியாவில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு 562.392 கோடி ஆக உயர்ந்துள்ளது. எனவே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணம் புழக்கங்களை கட்டுப்படுத்த விரைவில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.சந்தோஷ் , சேலம் .
112. 47 கோடி தேர்தல் ஆணையம் அதிர்ச்சி !
சார்ந்த செய்திகள்
Next Story
படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !
கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
Next Story
“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.
கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு.
தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.
பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம்.
தீராத… pic.twitter.com/4IpZXjvMD9— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 27, 2024