Skip to main content

புதிய கல்வி கொள்கை ஆலோசனையில் ஏன் கலந்துகொள்ளவில்லை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Why not participate in the new education policy consultation ..? Minister Anbil Mahesh

 

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் அமைச்சரும் பங்கேற்காமல் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை; நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வராததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.

 

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அனுப்பிய சுற்றறிக்கையில் புதிய கல்விக் கொள்கை குறித்த மூன்று முக்கிய அம்சங்களை விவாதிக்க வேண்டும் கல்வியில் மாற்றம் ஆன்லைன் வகுப்புகள் குறித்த செயல்பாடுகள் மாநிலங்களில் கல்வி நிலை உள்ளிட்டவற்றை ஆலோசிக்க நேரில் வருமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டிருந்தது.  அந்த சுற்றறிக்கையில் தற்போது புதிதாகப் பொறுப்பேற்ற கூடிய அமைச்சருடைய பெயரை அதில் இணைக்காமல் மின்னஞ்சல் வந்ததால் பள்ளிக்கல்வித்துறை மத்திய அரசுக்கு மீண்டும் அமைச்சருக்கு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் ஒரு விரிவான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று பதிலளித்து இருந்தோம். அதற்கு எந்தவித பதிலும் மத்திய அரசிடம் இருந்து திரும்பி வராததால் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. 

 

குலக் கல்வி முறையைத் திணிக்கப் பார்க்கிறார்களே என்ற என்ற அச்சம் இருக்கிறது. 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் வீதம் ஒதுக்கி ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்கள் கல்வி கற்பதற்கான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.

 

மத்தியில் ஆளுபவர்கள்  யார் எதைப் படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது வளர்ந்த நாடுகளில் கூட இந்த முறை இல்லை. அதேபோல் ஐந்தாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பது கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசினுடைய இந்த கல்விக் கொள்கையில் நாங்கள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறோம். ஏனென்றால் குழந்தைகளின் மனநிலையைப் பொருத்தும் அவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க விரும்பாத தான் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

 

கல்வி தொலைக்காட்சியை இன்னும் சற்றுக் கூடுதலாக மேம்படுத்தி புதிய முனைப்போடு மாணவர்கள் அதை ஆர்வமுடன் கவனித்துப் படிக்க உறுதுணையாகத் தொலைக்காட்சி மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு மத்தியிலிருந்து பதில் திரும்பப் பெறவில்லை என்றால் நாங்கள் முதலமைச்சரோடு தொடர்புகொண்டு அவரோடு ஆலோசனை செய்து மீண்டும் அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். 

 

12ஆம் வகுப்புக்கான தேர்வை நாங்கள் முறைப்படி திட்டமிட்டு அறிவித்து அதன் பிறகுதான் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு எந்த விதத்திலும் சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பாமல் நிறையச் சரியாகத் திட்டமிடப்பட்டு உரிய நேரத்தில் இந்த தேர்வு முறையாக நடத்தப்படும். 2019ல் திமுக சில திருத்தங்களை மத்திய கல்விக் கொள்கையில் கொடுத்திருந்தது. அது எல்லாம் முழுமையாகச் செலுத்திய பின்னரே புதிய கல்விக் கொள்கையை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ அறிமுக கூட்டம்!

Published on 21/03/2024 | Edited on 22/03/2024
MDMK candidate Durai Vaiko's introductory meeting

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி தெற்கு  மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க வேட்பாளர் துரை.வைகோ தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், மாவட்டக் கழகச் துணை செயலாளர் செங்குட்டுவன், ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், கு.சின்னப்பா, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் மு. இராஜேந்திரன், ரொஹையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story

“திமுக கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Women should support the DMK alliance says Minister Anbil Mahesh

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஐம்பெரும் விழா திருச்சியில் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் நடந்தது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஸ்ரீதர் வரவேற்றார். விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.3 கோடி ரூபாயை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். இம்மானுவேல் சேகரனாருக்கு திருச்சியிலும் சிலை அமைக்கப்பட உள்ளது. திமுக அரசு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் .வருகின்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு இங்கு கூடியிருக்கிற பெண்களால் தான் முடியும். நீங்கள் தான் வீட்டு அடிப்படி வரை சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூற முடியும். வரும் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரியில்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களுக்கு திமுக அரசு என்றென்றும் உறுதுணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் திருவடிக்குடில் சுவாமிகள் சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  விழாவில் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன், சமத்துவ இந்து மக்கள் கட்சி தலைவர் அல்லூர் சீனிவாசன், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் லட்சுமி நாராயணன், திருச்சி வளர்ச்சி குழு தலைவர் வழக்கறிஞர் என்.எஸ்.திலீப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் திருச்சியின் மையப் பகுதியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் சிலையை நிறுவ வேண்டும், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வது, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு ஒரு தனி தொகுதியை ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுப்பது, 2016 முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு ஏதேனும் ஒரு வாரியம் வழங்க முதல்வரை சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முசிறி ஒன்றிய செயலாளர் செந்தமிழன் நன்றி கூறினார்.