Skip to main content

’மோடி தமிழகத்துக்கு வரும்போது திமுக சார்பில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்’ -ஸ்டாலின்

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

 

  

stalin

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின்  இன்று (30-03-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
 

ஸ்டாலின்: அண்மையில் ஈரோட்டில் நடந்து முடிந்த திராவிட முன்னேற்றக் கழக மண்டல மாநாட்டுக்கு பாடுபாட்டு, உழைத்து பணியாற்றிய கழக முன்னணியினருக்கு, கழக தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கின்ற தீர்மானமும், நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற தீர்மானமும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்ற தீர்மானமும், நேர்மையற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் நடத்திட வேண்டுமென்ற தீர்மானமும், மருத்துவ கல்வி மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும், காவிரி பிரச்ச்னையில் நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத மத்திய – மாநில அரசுகளை கண்டிக்கின்ற தீர்மானமும், நிறைவாக, காவிரி பிரச்சினையில் கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கின்ற மத்திய – மாநில அரசுகளை கண்டித்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை எந்தவகையில் நடத்துவது என வரும் 1 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, முடிவெடுத்து, அறிவிக்கும் அதிகாரத்தை செயல் தலைவர் என்றமுறையில் இந்த செயற்குழு அளித்து,  7 வது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மொத்தம் 7 தீர்மானங்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்துக்கு வருகின்ற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கறுப்பு கொடி காட்டுவதென்றும் முடிவு செய்திருக்கிறோம்.

 

 
செய்தியாளர்: தமிழக அரசின் சார்பில் வரும் 2 ஆம் தேதியன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே?
 

ஸ்டாலின்: காலக்கெடு முடிவதற்கு முன்பாக, கடைசி நிமிடம் வரை ஓபிஎஸ், “பொறுங்கள் இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, பொறுங்கள் இன்னும் 3 நாட்கள் இருக்கிறது, இன்னும் ஒருநாள் இருக்கிறது, அரை நாள் இருக்கிறது, 29 ஆம் தேதிக்குள் நல்ல செய்தி வரும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, சாகும் நேரத்தில் “சங்கரா, சங்கரா” என்று சொல்வது போல, ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். நேற்றைக்கு அமைச்சரவையை கூட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்று ஒரு செய்தியாவது வந்திருக்கிறதா என்றால் இல்லை. உண்மையில் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், மத்திய அரசு இதனை செய்யவில்லை என்று கண்டித்து, தீர்மானம் போடும் தெம்பு, திராணி, நாகரிகம் இல்லை. காரணம் என்னவென்றால், ஊழல் செய்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி பறிபோய் விடக்கூடாது, மத்திய அரசு அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்து விடும் என்பதால், மண்டியிட்டு இந்த அரசு அடிமைபோல நடந்து கொண்டிருக்கிறது.


 

செய்தியாளர்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்று தெரிந்தே ஆட்சியாளர்கள் நாடகம் நடத்துகிறார்களே?
 

ஸ்டாலின்: இதையே தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகிறோம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோதும் இதை குறிப்பிட்டோம். அனைத்து கட்சி கூட்டத்திலும் தெரிவித்தோம். இதெல்லாம் வெறும் கண் துடைப்புதான். பிரதமர் கண்டிப்பாக சந்திக்க மாட்டார். ஆகவே, இதை நிறைவேற்றப் போவதில்லை, என்று சட்டமன்றத்தில் நாங்கள் தெரிவித்தோம். அதுமட்டுமல்ல, தீர்மானத்தை நிறைவேற்றியபோது, உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் சட்டமன்றத்திலேயே தெரிவித்து இருக்கிறேன். ஆனால், அதற்கான முயற்சியில் இதுவரை அவர்கள் ஈடுபடவில்லை.

 

 
செய்தியாளர்: எல்லா எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதெனில் நாங்களும் செய்வோம் என்று காங்கிரஸார் தெரிவித்து இருக்கிறார்களே?

ஸ்டாலின்: இதை நான் முன்பே தெரிவித்தேன். அதிமுக முன்வந்து, 50 எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால், எங்களுடைய 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவும் தயார். அதேபோல, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முன்வந்தால், அடுத்த நிமிடமே திமுகவின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம், என்றும் தெரிவித்தேன். ஆனால், அந்த துணிச்சல் ஆளுங்கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை.


 

செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான நீங்கள் பிரதமரை சந்திப்பீர்களா?
 

ஸ்டாலின்: இதற்காக பலமுறை நாங்கள் கடிதம் அனுப்பியும், ஒருமுறை கூட அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.