Skip to main content

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் சும்மா விடுமா? தேர்தல் முடிவு குறித்து தமிமுன் அன்சாரி

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
thamimun ansari



மோடிக்கு எதிரான அலை வெளிப்படையாக வீசத் தொடங்கியிருக்கிறது என்று நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
 

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்த அவர்:-
 

நடைப்பெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பு என்பது நாடு தழுவிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

 

மிக முக்கியமாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவு என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பதும் மக்கள் மாற்றத்தை நோக்கி நகருகிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது. 
 

நிச்சயமாக இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதான ஒரு அரையிறுதி ஆட்டத்தைப்போலவே பார்க்க வேண்டியிருக்கிறது. 
 

மிசோரம் என்பது பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்தான் எப்போதும் முக்கியத்துவம் பெறும். அங்கு கூட காங்கிரஸ் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 

அதேபோன்று காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி என்று சொன்னால் அது தெலுங்கானாவாக மட்டும்தான் இருக்க முடியும். 
 

ஏனென்று சொன்னால் தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவும், ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமின் தலைவரான அசதுத்தீன் ஒவைசியும் முன்னதாகவே வலுவான கூட்டணியை வைத்து பிரச்சாரத்தில் இறங்கியது அவர்களது வெற்றிக்கு மூலக்காரணமாகும். அங்கும்கூட காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், பாஜக மூன்றாவது இடத்திலும் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். 
 

எது எப்படி இருந்தாலும் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு, அதனுடைய நான்கரை ஆண்டு கால மத்திய ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைத்தான் வெளிக்காட்டுகிறது. 
 

இதனை காங்கிரஸ் கட்சி எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு எப்படி நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகரப்போகிறது என்பதை எல்லோருமே கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 

மொத்தத்தில் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வெளிப்படையாக வீசத் தொடங்கியிருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஜி.எஸ்.டி. விவகாரம், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, விலைவாசி ஏற்றம், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவைகளின் அநியாய விலையேற்றம், நரேந்திர மோடியினுடைய அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு ஆதரவான போக்கு போன்றவைகளையெல்லாம் இந்த நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது உறுதியாகிறது. இதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உணர முடிகிறது.
 

இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது என்று பாஜகவினர் கூறுகின்றனரே?
 

தோல்வி அடைந்தவர்கள் எப்போதும் சொல்லக்கூடிய சமாதான வார்த்தைகள் இது. 
 

எல்லாவற்றையும் தாண்டி கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும், தமிழ்நாட்டில் கஜா புயல் சூறையாடியபோதும் பிரதமர் என்பதை மறந்து நரேந்திர மோடி எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் சும்மா விடாதல்லவா?.
 

இவ்வாறு கூறினார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.