Skip to main content

திருச்சி தொகுதியில் களம் இறங்கும் விஜயகாந்த மகன்! 

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

திருச்சியில் எம்.பி. தொகுதியில் அ.தி.மு.க. எம்.பி. குமார் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிப்பெற்று 3வது முறையாக போட்டியிட தயாராக இருந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து போட்டியிடுவதற்கு 15 பேருக்கு மேல் தலைமையில் பணம் கட்டியிருந்தார்கள். அவரவர் அவர்களின் வழிகளில் சீட்டு வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியிந்தார்கள். 
 

இந்த நிலையில் பிஜேபி - அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவை இணைத்தே தீர வேண்டும் என்றும் அ.தி.மு.க. தலைமைக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுத்த நிலையில் 7 சீட்டு வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் பேசி கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தி,மு.க. தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்த நிலையில் தீடீர் என தி.மு.க. எங்களுடைய தொகுதி பங்கீடு முடிந்தது என்று பகிங்கரமாக அறிவித்த நிலையில், திரும்பவும் அ.தி.மு.க. பக்கம் சென்றபோது 4 சீட்டு இல்லை, 3 சீட்டு தான் கிடைக்கும். அதிலும் இரண்டு தனித்தொகுதி என்றொல்லம் பேரம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் பிஜேபி தலையிட்டு தேமுதிகவிற்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளை ஒதுக்குங்கள் என கடுமையாக சொல்லிவிட்டார்களாம். 

 

vijay prabhakaran



இதன் அடிப்படையில் தேமுதிகவிற்கு திருச்சி எம்.பி. தொகுதி ஒதுங்கியதாக தெரிகிறது. திருச்சியில் தேமுதிகவை பொறுத்தவரையில் ஏற்கனவே தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.ஜி விஜயகுமார் என்பருக்கு தான் சீட்டு கிடைக்கும் அல்லது பிரேமலாதா தம்பி சுதிஷ் இங்கு போட்டியிடுவார் என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தனர். 
 

இந்த நிலையில் திருச்சியில் விஜயகாந்த கட்சி ஆரம்பிப்பதற்கு மிக முக்கியமான ரசிகர்கள் பல பேர் திருச்சியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் திருச்சியில் விஜயகாந்த மகன் விஜய் பிரபாகரனை திருச்சியில் போட்டியிட சொல்லுங்கள், திருச்சியில் திருவரம்பூர், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் கனிசமாக விஜயகாந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே திருச்சியில் வைத்து விஜயகாந்த் மகனுக்கு மாநில இளைஞர் அணி மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். ஏற்கனவே சுதிஷ் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்கிற சர்வே எடுத்த அடிப்படையிலே விஜயகாந்த மகன் தற்போது களம் இறக்கலாம் என்கிற யோசனை இருக்கிறது என்கிறார்கள் விஜயகாந்த கட்சியில் உள்ள மேல் மட்ட நிர்வாகிகள். 
 

விஜயகாந்த மகன் குறித்து கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது.. 
 

'விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. மகனுக்கு உடனடியாக பதவி கொடுத்து விட்டால் சர்ச்சையாகும் என்பதால் படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.
 

விஜயகாந்துக்கு உருவான செல்வாக்கு அதன் பின்னர் அவரது கட்சியில் இருக்கும் யாருக்கும் உருவாகவில்லை. மகனை களம் இறக்கும்போது மக்களிடம் இழந்த செல்வாக்கையும் இளைஞர்கள் நம்பிக்கையையும் பெற முடியும் என்று நம்புகிறார். தனக்கு பின் கட்சியின் அதிகாரம் முழுவதையும் மகனுக்கு மாற்ற விரும்புகிறார்.
 

விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்னர் உட்கட்சி பிரச்சனையை ஆராயும் குழு என்ற குழுவைஅமைத்து அதன் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை நியமித்தார். இந்த குழுவுக்கு வரும் புகார்கள் அனைத்தும் விஜய் பிரபாகரன் கவனத்துக்கும் செல்கிறது.
 

அந்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மெல்ல மெல்ல மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு கொண்டு வருகிறார்' இதனால் அவர் பலருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சி எங்கள் விஜயகாந்த மகனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
 

சமீபத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவரம்பூர் பகுதியில் கார்வழியாக சென்ற விஜயபிரபாகரனுக்கு 100 கணக்கில் கார் அணி வகுப்பு நடத்தி திருச்சி தேசிய நெடுஞ்சாலையே ஸ்தம்பிக்க வைத்தது குறிப்பிடதக்கது . 
 


ஏற்கனவே தேனியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜயபிரபாகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.