Skip to main content

தினகரன் வீடுதேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்: தங்கமணி

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
Thangamani


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார்.
 

அப்போது அவர், 
 

அம்மா ஒருமுறை சட்டமன்றத்தில் பேசியபோது, எனக்கென்று யாரும் கிடையாது, எனக்காக இருப்பவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களும், ஏழரை கோடி தமிழக மக்களும்தான் எனது குடும்பம் என பேசினார். ஆனாலும் எனக்குப்பின்னால் 100 ஆண்டுகாலம் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினார். 
 

 

 

ஆனால் தினகரன் முதல்வராவதற்கு கனவு காணுகின்றார். ஜெயலலிதா இறந்தபிறகு கொறடா மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் உள்பட நாங்கள் அனைவரும் தினகரன் வீட்டிற்கு சென்று தினகரனிடம் நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்தபிறகு பிரச்சினைகள் அதிகம் வந்துவிட்டது, ஆகையால் நீங்கள் இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள். ஓ.பி.எஸ். முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். அவரை வைத்து நாங்கள் இந்த இயக்கத்தை நடத்தி கொள்கிறோம் என்று சொன்னோம். அப்போது என்னையும், வேலுமணியையும் பார்த்து உங்கள் வீடுதேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்.
 

 

 

ஒரு தொகுதியில் மக்கள் ஏமாந்துவிட்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் நுழையும்போதெல்லாம் ஏமாந்த மக்கள் ரூ.20 நோட்டை காண்பித்து ரூ.20 எங்கே, 10 ஆயிரம் எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்குகூட செல்லமுடியாத சட்டமன்ற உறுப்பினர்தான் தினகரன். 
 

ஜெயலலிதா ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது என்பதை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இந்த கட்சியில் உரிமைக்கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Next Story

“இ.பி.எஸ்.உடன் எந்த காலத்திலும் அமமுக இணைந்து செயல்படாது” - டிடிவி தினகரன் 

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Ammk will never work with EPS says TTV Dhinakaran

திண்டுக்கல்லில்  மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் டி.வி.வி. பேசுகையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உறுதி யாக கூட்டணி அமைத்து  தேர்த லை நாங்கள் சந்திப்போம். கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் முடிந்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்படும். துரோக சக்தியான எடப்பாடி பழனிச்சாமி உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் பயணிக்காது. எடப்பாடி பழனிச்சாமி என்ற துரோகியுடன் எந்த காலத்திலும் நாங்கள் இணைந்து செயல்பட மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடன் இணைந்து போட்டியிடமாட்டோம். 

அம்மாவின் உண்மை விசுவாசிகளான அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தேர்தலை நாங்கள் சந்திக்க உள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நான்கரை ஆண்டு காலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது யார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியவருக்கு துரோகம், இந்த ஆட்சியை பாதுகாத்து கொடுத்தவர்களுக்கும் துரோகம், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம், எடப்பாடி பழனிசாமி துரோகம் என்ற கத்தியை கையில் எடுத்து உள்ளார். அந்த கத்தியாலேயே அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வீழ்வார். எடப்பாடி பழனிச்சாமி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார். துரோகம் என்றைக்குமே ஜெயிக்கப் போவதில்லை. அது வீழப்போகும் நேரம் வந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலில் பல கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது உறுதியான பிறகு தகவல் தெரிவிக்கப்படும்.

திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் விவசாயிகள் இளைஞர்கள் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போக்கு வரத்து தொழிலாளர்கள் அனைத்து சமுதாய மக்களும் அனைத்து தரப்பினரும் ஏண்டா இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என மிகவும் வருத்தத்துடன் உள்ளனர். இந்தக் கோபம் இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தப் போகிறது. இந்தியா கூட்டணி எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது” என்றார்.

பழைய அதிமுக மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு :- பதில் அளித்த டிடிவி தினகரன், அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். அதனை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வருகிறார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் பழனிச்சாமி போன்ற சுயநலவாதிகள் அதனை தடுக்கின்றனர் என்று கூறினார்.