Skip to main content

ஒரு ஏழைத்தாயின் மகனைத் திட்ட வச்சுட்டாரே இந்த ஆளு - ராஜூமுருகன் வருத்தம்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

திமுக கூட்டணியில் சி.பி.ஐ.எம் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் பேசுகையில்...

 

rajumurugan speech about s.vengatesan

 

“சு.வெங்கடேசனுக்கு ஓட்டுக் கேட்பது நானும், ஒட்டுமொத்த இந்தியாவும் கம்யூனிச இயக்கங்களுக்கு பட்டிருக்கிற நன்றிக்கடன். பல தொகுதிகளில் இவரெல்லாம் வேட்பாளரா என்று நினைக்கக்கூடிய சூழலில் இவர் நம் வேட்பாளர் என்று பெருமைப் படக்கூடிய ஒருவராக மதுரைத் தொகுதியில் சு.வெங்கடேசன் இருக்கிறார்.  25 ஆண்டுகளுக்கு மேலாக, இலக்கிய பணிகளில், அரசியல் மேடைகளில், களப் போராட்டங்களில் தனது வாழ்வை அர்பணித்த பெரும் போராளி சு.வெங்கடேசன். கீழடி விஷயத்தில் உரக்க குரல் கொடுக்கும் தமிழர், உத்தப்புரம் சுவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று போராடக்கூடிய நாயகன். எனவே, அவருக்கு எதிராக விழக்கூடிய ஒவ்வொரு ஓட்டும் செல்லாத ஓட்டுதான். 
 

எனக்கு மோடியின் மேல் என்ன கோபம் என்றால், ஏழை எளியவர்களுக்காகவே கட்டியமைக்கப்பட்ட இயக்கம் இந்த பொதுவுடமை இயக்கம். ஆனால், எல்லா மேடைகளிலும் ஒரு ஏழைத்தாயின் மகனைத் திட்டி திட்டிப் பேச வச்சுட்டாரே இந்த ஆளு, என்பதுதான்.  இந்த ஏழைத்தாயின் மகன் ஒவ்வொரு முறை அரசியல் என்னும் விளக்கை தேய்க்கும்போது அதானி என்ற பூதமும், அம்பானி என்ற பூதமும், அமித்ஷா என்ற பூதமும் கிளம்பி வந்து மக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது.  
 

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது பத்திரிக்கையாளர் சப்னம் ஹாஸ்மிக்கை சந்தித்தேன். அவர் அரசியல்வாதிகளை எதிர்த்து ஹல்லா போல் என்ற வீதி நாடகத்தை நடத்தும்போது பாதியிலேயே அடித்துக் கொல்லப்பட்ட பெரும் போராளி சஃப்தர் ஹாஸ்கிக்கின் தங்கை. அவரும் அண்ணன் வழியில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரிடம் நான் “உங்களுக்கும் கௌரி லங்கேஷ்க்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என்ற அச்சம் இல்லையா”என்றேன்.   “நிச்சயமாக அந்த அச்சம் எங்களைப் போன்ற எல்லோருக்கும் இருக்கு. இன்றுவரை நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால், திரும்பவும் இந்த ஆட்சி வந்தால் நிச்சயமாக படுகொலை செய்யப்படுவோம்”என்று கூறினார்.  இது அவரது அச்சம் மட்டுமல்ல, இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்தமாக கருத்துரிமை நசுக்கப்படும், பல படுகொலைகள் நடக்கும், அதில் நம்முடைய உயிரும் போகும். 
 

மிக மோசமாக நம் இயற்கை வளங்களை சுரண்டிக்கொண்டு, சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் நம்மை பிரித்துக்கொண்டு ஒரு போர் சூழலை இங்கு உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த பாசிட்டுகளுக்கு எதிராக பொதுவுடமை கட்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதன் பிரதிநிதியாக இருக்கும் சு.வெங்கடேசனுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் நமது ஒவ்வொரு ஓட்டயும் பதிவு செய்து மதுரையை மீட்போம், இந்தியாவை மீட்போம், ஜனநாயகத்தை மீட்போம்”. என்று பேசி முடித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.