Skip to main content

பிடிஆரின் செயல்பாடுகளை பாராட்டிய ராஜேந்திர பாலாஜி..! 

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Rajendra Balaji praises Finance Minister's performance ..!

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த பல அமைச்சர்கள் இருக்கும் இடம் தெரியாமல் தற்போது தங்களுடைய அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது முன்னாள் அமைச்சர்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இதனிடையே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று இரவு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.

 

கடந்த ஆட்சி காலத்தில் ஓரிரு கூட்டங்களுக்கு மட்டும் திருச்சிக்கு வருகை தந்த ராஜேந்திர பாலாஜி, நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் அதிமுகவினர் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். தரிசனத்தை முடித்துக்கொண்டு தஞ்சைக்கு புறப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய அரசியல் சூழல் நன்றாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. திமுகவின் சட்டமன்ற கூட்டத்தொடர் ஒரு நல்ல நாகரீகத்தை கொண்டுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். தற்போதைய திமுக நிதி அமைச்சரின் செயல்பாடும் நன்றாக உள்ளது” என பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்