Skip to main content

இ.பி.எஸ். வாகனத்தை மறிக்க முயற்சித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்! 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

ops supporters tried to block eps car

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பைக் கிளப்பிவரும் சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாக கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இன்று பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், கூட்டம் முடிந்து எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கிரின்வேஸ் சாலை செல்வதற்கு அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுவந்தனர். ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் வந்தபோது, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இவர்களது வண்டியை மறிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அங்கிருந்து விலக்கிவிட்டனர். மேலும், அப்போது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், ‘அதிமுக  அலுவலகத்திலிருந்த ஓபிஎஸ்  புகைப்படத்தைக் கிழிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்து’ கோஷங்கள் எழுப்பினர். இதனால் ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்