Skip to main content

"என்னிடம் ஆதாரம் உள்ளது.. நேரு பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" - ப.குமார் 

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

I have proof .. Nehru should stop lying - P.Kumar

 

திருச்சி மாவட்டம், லால்குடியில் இன்று (18.02.2021) அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், “கடந்த வாரம் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதில் அதிகம் பயனடைந்தது அதிமுகவினரே தவிர, திமுகவினர் நிராகரிக்கப்பட்டனர்’ என்று விமர்சித்திருந்தார்.

 

தமிழக முதல்வர் அறிவித்த அந்த பயிர்க் கடன் தள்ளுபடியில் அதிக அளவில் பயன் அடைந்தது திமுககாரர்கள். அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. எனவே திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இதுபோன்று பொய் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார். 

 

“கடந்த மூன்றுமுறையும் இந்த லால்குடி தொகுதியில் அதிமுக தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்தமுறை தமிழக முதல்வரின் அறிவிப்பு சாதனைகள் அனைத்தும் லால்குடி தொகுதியில் அதிமுக வெற்றி பெற வழிவகை செய்யும்” என்றும் குறிப்பிட்டார்.

 

சார்ந்த செய்திகள்