Skip to main content

’’ஒரு பாட்டுதானே பாடினார்; அது தேச துரோக குற்றமா?’’ - கோவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள்

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
kovan1

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவன் வன்முறையை தூண்டும் விதமாக பாடியதாகவும், போராட்டத்தில் பேசியதாகவும் 2 பிரிவுகளின் கீழ் கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடகர் கோவனை கைது செய்ய மாற்று உடையில் டூரிஸ்ட் வாகனத்தில் சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் கைது செய்ய கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இது குறித்து நம்மிடம் பேசின கோவன் மனைவி, வீட்டில் நானும் அவரும் தனியே இருந்தோம். அப்போ ஒரு சில பேர் மப்டியில் வந்து அவரை வெளியே வர சொன்னார்கள். அப்போது போலிஸ் இல்லாமல் நாங்கள் வெளியே வர மாட்டோம் என சொல்லி என் கணவரை வெளியே வீட்டில் உள்ளே வைத்து தள்ளி கதவை சாத்தினோம். கொஞ்ச நேரத்தில் ஒரு போலிஸ் வந்து நாங்க போலிஸ் தான் என்று சொல்லி கைது பண்ண வந்தார்கள். என்ன வழக்கு, எந்த பிரிவு என்று கேட்டுக்கொண்டு இருந்தோம். தீடீர் என எங்கிருந்தோ வந்த சில பேர் கோவனை  அடித்து இழுத்து இடுப்பில் குத்தியும் தூக்கி சென்றார்கள். அப்போது என்னுடைய மகள், மகன் ஆகியோர் வந்து எனது கணவரை மீட்க நினைத்த போது அவர்களுடைய கையில் காயம் ஆயிடுச்சு. 

 

போலிஸ் வாகனம் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வேனின் முன் பகுதியில் வண்டியில் எல்லோம் போட்டோம். அதையும் மீறி அப்புறப்படுத்தி விட்டு எங்கே அழைத்து செல்கிறோம் என்று சொல்லாமல் சென்று விட்டார்கள். 

 

கோவன் கூட்டத்தில் மற்றும் போராட்டத்தில் பேசிய வீடியோ பதிவுகளை பார்த்து திருச்சி கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கோவன் மீது வழக்குகள் பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

 

அப்போது நீதிமன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். கோவன் நீதிபதி கௌதமன் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். அப்போது கோவனுக்கு ஜாமீன் விண்ணப்பம் செய்த வழக்கிறஞர்கள் தரப்பில் 10 வழக்கறிஞர்களுக்கு மேல் ஆஜர் ஆகி, ’ஏல எங்க வந்து நடத்துற ரதயாத்திரை’ என்பது தேச துரோக குற்றமா இதற்கு கைது செய்யலாமா ? ஒரு பாட்டு தானே பாடினார் என்று ஜாமீன் வழங்க கோரினர்.

 

சிறு நேரம் அவகாசம் வழங்கிய நீதிபதி கௌதமன், போலிஸ் மற்றும் கோவன் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை கேட்ட நீதிபதி கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி 15 நாள் திருச்சி நீதிமன்றத்தில் கையெழுத்து போட வேண்டும் என்கிற உத்தரவோடு ஜாமீன் வழங்கினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசை விமர்சித்து பா.ஜ.க.வினர் வெளியிட்ட பிரச்சார பாடலால் பரபரப்பு!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
The propaganda song released by the BJP criticizing the central government caused a stir

கேரளா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் கே.சுரேந்திரன். இவர் மாநிலம் முழுவதும், ‘கேரள பாதயாத்திரை’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலம் தழுவிய இந்த நடைபயணத்திற்காக கேரளா பா.ஜ.க சார்பில் ஒரு பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. 

அந்த பாடலில், ஊழல் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைக்கு விடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலை, கேரள பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெறும் இந்த பாடலை கேரள பா.ஜ.க வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை'- பாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

nn

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், பல்கலைக்கழக துணைவேந்தர் சீ. சௌமியா, பல்கலைக்கழக பதிவாளர் சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கும், கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக் கலைஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பாடகி பி. சுசீலா, பி.எம். சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் அவருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதைப் பாடியிருக்கிறேன். ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை’. அதனால் மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுத்தான், நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னேன்'' என்றார்.