Skip to main content

''மக்களே மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்; வாழ்க வசவாளர்கள்''-ஆத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

dmk

 

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு இன்று (24/05/2022) காலை வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உயரதிகாரிகள், அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமலூர் விமான நிலையத்தில், சேலம் மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் மேட்டூர் அணைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் சால்வை அணிவித்தனர். பின்னர், குறுவைச் சாகுபடிக்காக முதலமைச்சர் அணையைத் திறந்து வைத்தார்.

 

dmk

 

அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்குச் சென்றிருந்தது. 10 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த தமிழ்நாடு தற்பொழுது புத்துணர்ச்சி பெற்றுள்ளது. தரையில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாடு நெஞ்சை நிமிர்த்தி நிற்க தொடங்கியுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தங்களின் விருப்பப்படி தண்ணீரை திறந்துவிட்டனர். திமுக ஆட்சியில் இறக்கையே ஆதரவு தரும் வகையில் மழை பொழிகிறது. மேட்டூர் அணை திறப்பால் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும். கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

 

திமுக ஆட்சியின் ஓராண்டு காலம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோவில்களுடைய சொத்துக்கள் திமுக ஆட்சியில்தான் மீட்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். கோவிலில் பணியாற்றும் அனைவருக்கும் 4 ஆயிரம் ரூபாய் பணமும் அரிசி, பருப்பு என மளிகை பொருட்கள் கொடுத்துள்ளோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. கோவில்களில் அன்னைத்தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டுள்ளோம். 12 இறைவன் போற்றி பாடல் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள் உருவாக்கப்போகிறோம்.

 

இவை இந்து சமய அறநிலையத்துறையால் கடந்த ஓராண்டு காலத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள், சாதனைகள். உண்மையான ஆன்மீகவாதிகள் நீங்கள் என்றால் இதை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக மதத்தை வைத்து அரசியல் செய்து மதவெறியை தூண்டும் வகையில் இருப்பவர்கள் இதை திசை திருப்புகிறார்கள். பொய்யான அவதூறுகளை சொல்லி  ஆட்சியின் மீது அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவதூறுகளை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. 'வாழ்க வசவாளர்கள்' என அண்ணா சொன்னதன்படி என் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். யாருக்கும் பதில்சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

 

நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே எனக்கு நேரம் பத்தல, அவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு எங்க நேரம் இருக்கு. திராவிட மாடல் யாரையும் பிரிக்காது, ஒன்று சேர்க்கும். இது ஒரு கட்சியின் அரசல்ல ஒரு இனத்தின் அரசு. திராவிட மாடல் யாரையும் இடிக்காது,உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது அரவணைக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். தமிழக மக்களுக்காக எனது சக்திக்கு மீறியும் உழைப்பேன். மாநில அரசின் முழு வரியையும் ஒன்றிய அரசு சுரண்டி தின்றுவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை பன்மடங்கு உயர்த்திவிட்டு தற்பொழுது சிறிது குறைந்துள்ளார்கள். ஒன்றிய அரசு வழங்க வேண்டிய  21,760 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை'' என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.