Skip to main content

மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்! மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் தீர்மானம்

Published on 03/05/2020 | Edited on 04/05/2020

 

mjk - Special Management Committee


மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தலைமையில் வீடியோ காண்பிரன்ஸ் மூலம் நடைப்பெற்றது. இதில் கரோனா கால பிரச்சனைகள், மக்கள் படும் சிரமங்கள், அரசியல் சூழல் ஆகியவை  குறித்து விவாதிக்கப்பட்டது.
 

இத்தருணத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஆற்றி வரும் சேவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த திட்டமிடல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 

1. மின் கட்டணம் ரத்து
 

கரோனா காலத்தில் மக்களின் வருவாய் இழப்பைக் கவனத்தில் கொண்டு மின்சாரக் கட்டணத்தைத் தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
 

2. மத்திய அரசின் நிவாரணம்
 

கரோனா காரணமாக 40 நாட்களைக் கடந்து மக்கள்  ஊரடங்கில் தவிக்கிறார்கள். மத்திய அரசு இனியும் மெளனம் காக்காமல் நாடு முழுக்க உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
 

3. மாநில அரசுகளுக்கு நிதி
 

கரோனா நெருக்கடி காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநில அரசுகள் கேட்கும் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு பாராபட்சமின்றி முழுமையாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
 

4. கலைக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வா?
 

எளியவர்கள், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்  மற்றும் கிராமப்புறத்தினர் பெருமளவில் கலைக் கல்லூரிகளில் சேர்ந்து பட்டதாரிகளாகியதால்தான்  மிகப் பெரும் சமுதாயப் புரட்சி ஏற்பட்டது. இப்போது மத்திய அரசு, கலைக் கல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என முடிவு செய்திருப்பது சமூக நீதியைத் தீயிட்டுக் கொளுத்தும் செயலாகும். உடனடியாக இம்முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
 

5. காவிரி உரிமையை மீட்போம்
 

காவிரி மேலாண்மை ஆணையத்தை நீர்த்துப் போக செய்யும் நோக்கில் மத்திய அரசு அதைத் தனது ஐல்சக்தி துறையின் கீழ் கொண்டு வருவது  என்பது மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வெளிக்காட்டுவதாக இருக்கிறது.
 

இவ்விடயத்தில்  விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் நடத்தும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்று காவிரி உரிமைகளை மீட்க களம் காண வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதுடன், மஜக இதில் முழுமையாகக் களமாடும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
 

6. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குச் சிறப்பு ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும்.

 

மிகவும் அசாதாரணமான இந்தச் சூழ்நிலையில், கரோனா நோய் உச்சத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில் அற்பணிப்பு உணர்வோடு, பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அனைவருக்கும் சிறப்பு ஒரு மாத ஊதியத்தைத் தமிழக அரசு வழங்க முன்வர வேண்டுமென இந்தச் சிறப்பு நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.
 

7. வாடகை வாகனங்களுக்கு சலுகைகள்...
 

ஊரடங்கு தடை காலத்தால் போதிய வருவாய் இன்றி தவிக்கும் மேக்சி கேப், கால் டாக்ஸி, ஆட்டோ, ஓட்டுநர்கள் ஆகிய வாடகை வாகனம் வைத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கான பர்மிட் மற்றும் வாகனப் புதுப்பிப்பு கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், புதுப்பிக்க கால அவகாசத்தை வழங்க அரசு முன்வர வேண்டுமெனவும் இந்தச் சிறப்பு நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது

.

http://onelink.to/nknapp

 

8. வெளிநாடு வாழ் இந்தியர் மீட்பு.
 

 


வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் கரோனா காரணமாகத் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். அவர்களைத் திரும்ப அழைக்க மத்திய அரசு தாமதம் செய்வதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு, துரித நடவடிக்கைகளில் இறங்கி அவர்களைத் தாயகம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
 

9. பாராட்டுகள்..
 

கரோனா ஒழிப்பு பணியில் அர்ப்பணிப்போடு செயலாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.