Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: தமிழக அரசுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

பாரதிய ஜனதா கட்சி சார்பில் 1988 கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நடைபெற்றது. 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. ஆட்சியில் உள்ளவர்கள் அதை புரிந்துக்கொள்ள வேண்டும். அடுத்தாண்டு அஞ்சலி கூட்டதிற்காவது மாநில அரசு அனுமதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

Ponnarakrishnan


 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி அரசு ஒராண்டை நிறைவு செய்ததே சாதனை. இக்கட்டான சூழ்நிலையில் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். சுப.உதயகுமாருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டிஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பொது மேடையில் விவாதிக்க தயார். தமிழக அரசு சுப.உதயகுமாரிடம் கவனமாக இருக்க வேண்டும். துறைமுகம், நெடுவாசல், கூடங்குளம் என தமிழகத்திற்கு வரும் திட்டங்களை எதிர்ப்பது தவிர எந்த திட்டங்களை வரவேற்றுள்ளனர்.
 

தமிழகத்தில் கிழக்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் வளர்ச்சி என்பது இல்லை. மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மத்திய அரசாங்கம் கொடுக்கும் நிதியை கொடுக்க மாட்டோம் என மாநில அரசு சொன்னால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றவர்கள்  என்றார்.
 

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு முன்கூட்டியே வந்திருக்க வேண்டிய திட்டம் எனவும், மருத்துவமனை அமைக்கும் இடம் தொடர்பாக தமிழக அரசு தெளிவான முடிவு எடுத்து பிறகு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுருத்தியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

pudukottai district gandharvakottai admk mla govt hospital

 

கரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு ஆகஸ்ட் 20- ஆம் தேதி கரோனா உறுதியானது. இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறுமுகம் பின் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கடந்த நான்கு நாட்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

Next Story

‘அட போங்கப்பா.. நீங்களும் உங்க எய்ம்ஸ் மருத்துவமனையும்..’ -மத்திய அமைச்சகத்தின் பதிலால் மக்கள் எரிச்சல்!  

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாகவும், இது அரும்பெரும் சாதனை என்றும், தமிழகத்தில் விளம்பரங்களும், பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர் மத்திய, மாநில அமைச்சர்கள். அதேநேரத்தில்,  மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவது குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதனால், ஹக்கீம் காசிம் என்பவர், மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

 

AIMS

 

மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா? கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி கிடைத்துவிட்டதா? நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது போன்ற அவருடைய கேள்விகளுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்கவில்லை, எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று பதில் அளித்திருக்கிறது அந்த அமைச்சகம்.

 

AIMS


இந்த பதிலால் ‘அட போங்கப்பா.. நீங்களும் உங்க எய்ம்ஸ் மருத்துவமனையும்..’ என்று தென்மாவட்ட மக்கள் எரிச்சல் அடைய, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முறையாக நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.” என்றார்.

 

AIMS


தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசு விரைவிலேயே நிதி ஒதுக்கும்.” என்று கூறியிருக்கிறார்.

 


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ல் அறிவிப்பு வந்தது.  2018 ஜூனில் நிலம் ஒதுக்கீடு ஆனது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. அதனால்,  நிதி ஒதுக்கப்படுமா? வெற்று அறிவிப்பாக இருந்துவிடுமா? என, சந்தேகங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.