Skip to main content

பெரும் எதிர்பார்ப்புடன் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

Zomato Shares Listed Today With Great Expectation!

 

ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப் பங்குகள், இந்திய பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) பட்டியலிடப்படுகின்றன.

 

சொமேட்டோ நிறுவனம், வணிக அபிவிருத்திக்காக பொதுப் பங்குகள் வெளியீடு மூலம் 9,375 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருந்தது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை 14ஆம் தேதி ஐ.பி.ஓ. எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலில் களமிறங்கியது.

 

ஒரு பங்கின் விலை 74 - 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கரோனா ஊரடங்கு காலத்திலும் கடந்த ஆண்டு கணிசமாக லாபம் ஈட்டியிருந்தது சொமேட்டோ. எனினும், அந்நிறுவனத்துக்கு கடன் சுமையும் இருந்துவருகிறது. இதனால் பொதுப்பங்கு எந்தளவுக்கு வெற்றிபெறும் என்ற தடுமாற்றமான நிலையும் ஆரம்பத்தில் இருந்தது.

 

ஆனால், எதிர்பாராத வகையில் சொமேட்டோ பொதுப் பங்குகள், வெளியீட்டைவிட 38.25 மடங்குகள்வரை ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்தன. ஜூலை 16ஆம் தேதியுடன் இதன் பங்கு விற்பனை முடிவடைந்தன. கடந்த 13 ஆண்டுகளில், பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் திரட்டிய நிறுவனங்களில் மிக அதிக அளவு பங்குகள் கோரி விண்ணப்பங்கள் குவிந்தது சொமேட்டோ நிறுவனத்திற்கு மட்டுமே என வியப்புடன் கூறுகின்றன பங்குத்தரகு நிறுவனங்கள்.

 

அங்கீகரிக்கப்பட்ட பங்குத்தரகு நிறுவனங்கள் பெரிய அளவில் இந்நிறுவனத்தை சப்போர்ட் செய்திருந்தன. அவற்றிடமிருந்து மட்டும் 51.79 மடங்கு விண்ணப்பங்களும், அமைப்பு ரீதியற்ற முதலீட்டாளர்களிடம் இருந்து 32.96 மடங்கு விண்ணப்பங்களும், சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து 7.45 மடங்கு விண்ணப்பங்களும் குவிந்தன. இதனால் பட்டியலிடப்படுவதற்கு முன்பே கிரே மார்க்கெட்டிலும் இப்பங்குகளுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு நிலவியது. 

 

இந்நிலையில்தான், பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியப் பங்குச்சந்தைகளில் சொமேட்டோ பங்குகள் இன்று (23.07.2021) பட்டியலிடப்படுகின்றன. தொடக்கத்திலேயே இப்பங்குகள் குறைந்தபட்சம் 96 முதல் 100 ரூபாய் என்ற அளவில் விற்பனையைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்சம் 25 முதல் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் எனத் தெரிகிறது. 

 

சில நாட்களுக்கு முன்பு, மற்றொரு முன்னணி உணவு வர்த்தக நிறுவனமான ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கணிசமான லாபம் ஈட்டியிருந்தது. அதன் நேர்மறையான சமிக்ஞைகளும் கூட சொமேட்டோ பங்குகள் மீதான பலத்த எதிர்பார்ப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. 

 

இதன் காரணமாகவே சொமேட்டோ நிறுவனம், ஜூலை 27ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்த பங்குகளை இன்றே பட்டியலிடுவதாகவும் பங்குத்தரகு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன. 

 

சொமேட்டோ நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்குமா? இல்லையா? என்பது இன்று தெரியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வலுத்த எதிர்ப்புகள்;  ஜொமேட்டோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Action decision taken by zomato company for strong objections

இந்த நவீன உலகில் அனைத்தும் இணையமயம் ஆகிவிட்டது. அந்த வகையில், தங்களுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டில் இருந்தபடியே செல்போனில் ஆர்டர் செய்து டெலிவரி மூலம் பெறும் முறை அதிகரித்துள்ளது. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியாக ஜொமேட்டோ இருந்து வருகிறது. இந்த செயலி மூலம், சைவம், அசைவம் உணவுகள் போல் அனைத்தையும் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்தில் டெலிவரி செய்பவர்களாக பணிபுரிபவர்கள், சிவப்பு நிற டி- ஷர்ட் அணிந்தபடி வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை டெலிவரி செய்வார்கள். இந்த நிலையில், ஜொமேட்டோ நிறுவனம், சுத்த சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டும் புதிதாக ‘pure veg mode' மற்றும் ‘pure veg fleet' என்ற சேவையை நேற்று (19-03-24) அறிமுகம் செய்தது. இதனை ஜொமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த சேவை குறித்து தீபந்தர் கோயல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உலகிலேயே இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சதவீதத்தை கொண்டுள்ளது. அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற மிக முக்கியமான கருத்து என்னவென்றால், அவர்கள் தங்கள் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவர்களின் உணவு விருப்பங்களுக்கு தீர்வு காண, 100% சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, சொமேட்டோவில் "Pure Veg Fleet" உடன் "Pure Veg Mode"ஐ இன்று அறிமுகப்படுத்துகிறோம்.

Action decision taken by zomato company for strong objections

Pure veg mode மூலம் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதில், எந்த அசைவ உணவுப் பொருட்களையும் வழங்கும் எந்தவொரு உணவகங்களும் இடம்பெறாது. எங்களின் பிரத்யேக  Pure veg fleet ஆப்ஷனில் சுத்தமான வெஜ் உணவகங்களிலிருந்து ஆர்டர்களை மட்டுமே வழங்கும். அதாவது, அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு, எங்கள் pure veg fleetஇல் பச்சை டெலிவரி பெட்டிக்குள் செல்லாது. இந்த Pure Veg Mode அல்லது Pure Veg Fleet எந்தவொரு மத, அல்லது அரசியல் விருப்பத்திற்கும் சேவையாற்றவோ அல்லது அந்நியப்படுத்தவோ இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்” என்று தெரிவித்திருந்தார். சுத்த சைவ உணவுகளை டெலிவரி செய்யும் பணியாட்கள், பச்சை நிற உடை அணிந்து, பச்சை நிற பையில் வைத்து டெலிவரி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய சேவைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜொமேட்டோ செயலியை அன் இன்ஸ்டால் செய்து அதன் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், சைவ உணவு பிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கான பச்சை உடை பிரிவை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சுத்த சைவ உணவு பிரியர்களுக்காக பிரத்யேக பிரதிநிதிகளை நாங்கள் பயன்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பச்சை நிற ஆடை கட்டுப்பாடு திரும்பப் பெறப்படுகிறது. சொமேட்டோவின் அனைத்து டெலிவரி பிரதிநிதிகளும் ஒரே மாதிரியான சிவப்பு நிற உடையே அணிவார்கள். 

Action decision taken by zomato company for strong objections

இதன் மூலம், சைவ ஆர்டர்களுக்கான வெளித்தோற்றத்தை அடையாளம் காண முடியாது. எங்களின் சிவப்பு நிற சீருடை டெலிவரி பிரதிநிதிகள், அசைவ உணவுடன் தவறாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதையும்,  எந்த விசேஷ நாட்களில் சமூகத்தால் தடுக்கப்படுவதையும் இது உறுதி செய்யும். எங்கள் பிரதிநிதிகளின் உடல் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர் கூட தங்கள் நில உரிமையாளர்களுடன் சிக்கலில் சிக்கக்கூடும் என்பதை நாங்கள் இப்போது உணர்ந்துள்ளோம், அது எங்களால் நடந்தால் அது ஒரு நல்ல விஷயமாக இருக்காது. நேற்றிரவு இதைப் பற்றி பேசிய அனைவருக்கும் நன்றி. இந்த வெளியீட்டின் எதிர்பாராத விளைவுகளை எங்களுக்குப் புரிய வைத்தீர்கள். தேவையற்ற அகங்காரமோ, பெருமிதமோ இல்லாமல் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

ஒரே ட்வீட்... உலக பேமஸ் ஆன தாத்தா

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 A single tweet... a world famous grandfather

 

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

 

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.