Skip to main content

காய்கறி விலையேற்றத்தைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Youth Congress struggle against vegetable price hike

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகத் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனைக் கண்டிக்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு விலைவாசி  உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இதில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளைப் பாடையில் வைத்து மலர் வளையம் வைத்து கண்டனம் தெரிவித்தனர். மேலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத மாநில மத்திய அரசுகளைக் கண்டித்து பதாகைகளைக் கொண்டு கண்டனம் தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்