Skip to main content

நாங்கள் பொய்யான வாக்குறுதி அளிக்க மாட்டோம் - பிரதமர் மோடி

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

ரகத

 

எங்களுக்குக் காங்கிரசைப் போல் பொய்யான வாக்குறுதி அளிக்கத் தெரியாது எனப் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

 

இந்த வருடத்தில் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் இந்த மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் இமாச்சலில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது ஆளும் கட்சியாக பாஜக உள்ள நிலையில் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இன்று மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, " எங்களுக்குக் காங்கிரசைப் போல் பொய்யான வாக்குறுதி அளிக்கத் தெரியாது. என்ன செய்வோமோ அதை மட்டும் தான் கூறுவோம். காங்கிரஸ் பொய் வாக்குறுதியைக் கொடுக்கும் பழைய தந்திரத்தைப் பின்பற்றி வருகிறது. அதை பாஜக ஏற்காது, எங்களுக்கும் அது தெரியாது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்