Skip to main content

வைஃபைலாம் வேண்டாம் ஒரு வாளி வைங்க போதும்! - வைஃபைக் குறித்து மக்கள் கருத்து.

Published on 01/09/2018 | Edited on 03/09/2018

ஆறு மாதங்களில் ஆறாயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செய்துதரப்படும் என்று ரயில்வே அமைச்சர் 'பியூஷ் கோயல்' அறிவித்து இருந்தார். இது தொடர்பாக நக்கீரன் தனது முகநூல் பக்கத்தில் 'ரயில்களில் மற்றும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதியைவிட அவசியமானதாக நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?' என்று மக்களின் கருத்தை கேட்டது. அதற்கு மக்கள் தாங்கள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுடன் உண்மை நிலவரத்தையும் பதிவு செய்தியிருக்கிறார்கள். அதில் மக்கள் அதிகமாக பதிவிட்ட கருத்துகள்.

 

rail

 

ரயில் பயணம் எப்போதுமே அழகானதும், அனுபவிக்கக்கூடியதுமானது, அதை நிச்சயம் நாம் அனைவருமே அனுபவித்து பயணித்திருப்போம். சில சமயங்களில் சிரமத்திற்கும் ஆளாகியிருப்போம் இருந்தும், ரயிலும் ரயில் பயணமும் இனிமையானதுதான். ஆனால் ரயில் ஏறுவதற்காக ரயில்நிலைய நடைமேடையில் காத்திருக்கும்போது நமக்கான பெட்டி எங்க வரும் என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு, சரியாக வேலை செய்யாத, (பெட்டி எண்களை காட்டும்) 'மின்னணு இண்டிகேட்டர்கள்' பார்த்து ஏமார்ந்து எப்படியோ ஒரு வழியாக ஏறிவிட்டால், அதன்பின்  இரவில் அந்த தண்டவாளத்தின் தாலாட்டுடன் உறங்கி, காலை ரம்மியமான சூரியக் கதிர்களை ஜன்னல் வழியே ரசிக்கும் வரை ரயில் பயணம் சொர்க்கம்தான். ஆனால், விழித்ததும், அவிழ்க்க வேண்டிய தருணத்தில் கழிவறையை நினைத்தால்தான் நரகத்தின் வாசலில் கால் வைப்பதுபோன்று தோன்றும். ஒன்று கழிவறை அசுத்தமாய் இருக்கும், அல்லது கழுவுவதற்கு தண்ணீர் இருக்காது, அப்படி அதுவும் இருந்துவிட்டால் வாளி இருக்காது, அதையும் தாண்டி வாளி இருந்துவிட்டால் அதை கைதியை போல் ஒரு சங்கிலியில் கட்டி வைத்திருப்பார்கள். சரி அது கைதியாய் இருந்தால் நமக்கென்ன நாம் சுதந்திரம் அடைவோமே என்றால், நம் அரசியல்வாதிகளிடம் சிக்கிய சில நேர்மையான அதிகாரிகள்போல் அதுவும் ஒரு எல்லை வரைத்தான் செயல்படும், எப்படியோ ஒருவழியாக 'சொப்பா' என்று வியர்த்து வெளி வந்தால், நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையம் எப்போது வரும் என்று தெரியாமல், 'ஒரு பத்து நிமிடத்திற்கு முன்னாடி அறிவிப்பு செய்தால் நிம்மதியாய் இருக்கலாமே' என்ற பதட்டத்தோடு நின்றிருந்தால் தண்ணீர் தாகம் உயிர் போகும், ஆனால் அவ்வளவு பெரிய ரயிலில் குடிக்க தண்ணீர் கிடைக்காது. 'சரி நமக்கு தண்ணி வேண்டாம், குழந்தைங்க அவங்க அம்மாகிட்ட பால் குடிக்கணும் அதுக்காவது ஒரு தனி இடம் இருக்கானு' பாத்தா அதுவும் இருக்காது. இதெல்லாம் முன்பதிவு செய்தும் பயணத்தில் திருப்தியில்லை என்று ஒரு கும்பல் ஓலமிடும் பதிவு என்றால், பல நாட்கள் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தும், அவசரத்திற்கும் எப்போது விடுப்பு கிடைக்கிறதோ அப்போது போய் குடும்பத்தை பார்க்கலாம் என்று வெள்ளிக்கிழமை இரவு, ரயில் வருவதற்கு முன்பிருந்து நான்கு மணி நேரம் காத்திருந்து, அடித்து புடித்து ரயில் ஏறுபவர்களுக்கு, 'பின் பக்கம் இரண்டு பெட்டி, முன் பக்கம் இரண்டு பெட்டியும்தான் இருக்கிறது'. இதை அதிகப்படுத்த மாற்றங்க என்று இன்னொரு கும்பல் கதறுகிறது. இதை எல்லாம் விடக்கொடுமை மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான சக்கர நாற்காலியும் கிடைப்பதில்லை, அது கிடைத்துவிட்டாலும் அதற்கு சரியான பாதை இருப்பதில்லை. இப்படியான பலவிதமான கருத்துகளை மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

இவையெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் குறை. புதிய திட்டங்கள் மிக, மிக அவசியம்தான், வரவேற்கப்பட வேண்டியதுதான், ஆனால் பழைய திட்டங்களில் உள்ள குறைகளையும் அதே ஈடுபாட்டோடும், கவனத்துடனும் எடுத்துக்கொள்ள வேண்டியது கடமை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.