Skip to main content

”கார்ப்ரேட்டுகளின் முதலீடு பாதிப்படைகிறது”-அருண் ஜெட்லி

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
ARUN Jaitley


பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் விரைவில் இணைக்கப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அறிவித்துள்ளார். இவ்வாறு இணைப்பதன் மூலம் கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொருளாதாரத்தில் வளர்ச்சியும் பெற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் மகிலா வங்கி உள்ளிட்ட ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, தற்போது இந்த மூன்று வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இப்படி இணைப்பதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுக்கும்.
 

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,” இந்த மூன்று அரசு வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் வங்கிகள் இன்னும் வலிமை பெறும், மக்களுக்கு அதிகப்படியான கடன்களை வழங்கி உறுதியாக இருக்கும். தற்போது வங்கிகள் உள்ள நிலையில், கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கின்றது. இதனால், கார்ப்ரேட்டுகளின் முதலீடு பாதிப்படைகிறது. ஆகவே இந்த மூன்று வங்கிகளை இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடு வலுப்பெறும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி கிரிக்கெட் மைதானத்துக்கு 'அருண் ஜெட்லி' பெயர்....கேலரிக்கு கோலியின் பெயர்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த மாதம் காலமானார். அவர் டெல்லி மாநில கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவராக இருந்தார். அதனால் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரை மாற்றி அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லிக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.  

 Delhi International Cricket Ground NAME ARUN JAITLY AND VISITORS SEATING BUILDING VIRAT KOHLI NAME


இதேபோல் மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் இருக்கை மாடத்திற்கு (கேலரி) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட்கோலி, ஷிகர் தவான் உட்பட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். 



 

Next Story

பிரபல கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர்... கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

 

The Ferozeshah Kotal Grounds in New Delhi will be renamed as the Arun Jaitley Stadium.

 

 

கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டிருந்த அருண் ஜேட்லிக்கு மரியாதையை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயரை வைப்பது என டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் அருண் ஜேட்லி பெயராலேயே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.