Skip to main content

சமூக வலைதளங்களை கண்காணிக்க தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை...

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

17-வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் முதல் மே வரை ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. அரசியல்கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர். நேரில் சென்று பிரச்சாரம் செய்வதைவிட இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளத்தில் செய்யப்படும் பிரச்சாரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளம் மாறிவருகிறது.

 

fb

 

இது ஒருவகையில் நல்ல விஷயம் என்றாலும் மறுவகையில் அதிகப்படியான போலி செய்திகளும் சென்று சேர்ந்து தவறான தகவல்களும் மக்களிடத்தில் சென்று சேருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏற்கனவே மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டு சில நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகிறது. இந்த நிலையில் தற்போது, சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தியுள்ளார். 

 

sunil arora


இந்தக் கூட்டத்தில் சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 
 

மேலும் தேர்தல் ஆணையம், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதை தேர்தல் ஆணையம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளது. குறைகளை தெரிவிக்க சமூக வலைதளங்கள் தனி அமைப்பை ஏற்படுத்துவது, கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட விளம்பர வருவாயை தெரிவிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.