Skip to main content

"அழுத்தம் கொடுக்கவில்லை என்றால் வேளாண் சட்டங்கள் வாபஸ் இல்லை. ஏனென்றால்" - ராகுல் காந்தி கூறும் காரணம்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

rahul gandhi

 

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இரண்டு நாள் சுற்றுப்பயமணமாக கேரளாவிற்கு வருகை தந்துள்ளார். தனது தொகுதியான வயநாடு பகுதியில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குத் தலைமை தாங்கிய ராகுல் காந்தி, த்ரிக்கிபட்டா முதல் முட்டில் வரை டிராக்டரை இயக்கினார்.

 

இதன்பிறகு விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, அழுத்தம் தரப்படாவிட்டால் வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறாது என்றும், இந்திய விவசாயத்தை 2-3 பேர் சொந்தமாக்கிக் கொள்ள, வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

இதுகுறித்து அவர், "இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை முழு உலகத்தாலும் காண முடிகிறது. ஆனால் டெல்லியில் உள்ள அரசால் விவசாயிகளின் வலியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர். ஆனால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை. அழுத்தம் தரப்படாவிட்டால் இந்த 3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப் போவதில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் முழு வணிகத்தையும் நரேந்திர மோடியின் 2-3 நண்பர்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

பாரத மாதாவுக்குச் சொந்தமான ஒரே தொழில் விவசாயம். மற்ற ஒவ்வொரு தொழிலும் யாரோ ஒருவருக்குச் சொந்தமானது. ஒரு சிலர் இந்த தொழிலை சொந்தமாக்க விரும்புகிறார்கள். இந்த 3 சட்டங்கள், 2-3 பேர் இந்திய விவசாயத்தை சொந்தமாக வைத்திருக்கவும் கட்டுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தில் உள்ள இருவர், அரசாங்கத்திற்கு வெளியே உள்ள இருவருடன் கூட்டணி அமைத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.