Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,035 ஆக அதிகரித்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,979 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. 


இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

pm narendra modi cabinet meeting coronavirus prevention

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும்  பங்கேற்கவுள்ளனர். 


அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசிக்க உள்ளார். 


 

சார்ந்த செய்திகள்