Skip to main content

காவல்நிலையம் சூறையாடல் எஸ்.ஐ க்கு 8 தையல்!

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் காவல்நிலையத்தில் சிலர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் எஸ்.ஐயின் மண்டை உடைந்தது.

 

 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ராப்பூர் என்ற இடத்தில் பிச்சையா,  ராஜாம்மா, கனகம்மா ஆகியோரிடம் கொடுத்த கடன் தொகையயை ஜோசப் என்பவர் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தரமுடியாது என மூவரும் கூறியதால் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் ஜோசப்.

 

attack

 

 

 

புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்.ஐ லக்ஷ்மணராவ் மூவரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து அவர்களது சாதிப்பற்றி பேசி அடித்ததாக கூறப்பட்ட நிலையில் பிச்சையாவின் உறவினர்கள் மற்ற கிராமமக்களை திரட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி காவல் நிலையத்தை சூரையாடினார். மேலும் எஸ்.ஐ லக்ஷ்மனராவை சரமாரியாக அடித்து உதைத்தனர். அடிக்கும் பொழுது அவர் சிறைக்குள் புகுந்து தப்ப முயன்றார் அப்போதும் விடமால் அவரை இழுத்து போட்டு கடுமையாக தாக்கினர்.

 

attack

 

 

 

இந்த கொலைவெறி தாக்குதலில் எஸ்.ஐ லக்ஷ்மனராவின் மண்டை உடைந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த  தாக்குதல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.