Skip to main content

புயல் தாக்கிய பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி...

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

அதிதீவிர புயலான ஃபானி புயல் கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. ஃபானி புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக மாறியுள்ளது.

 

narendra modi visits cyclone affected areas in odisha

 

 

இந்த புயலில் இதுவரை 38 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிசாவின் கடலோர பகுதிகளை பிரதமர் மோடி இன்று காலை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார். இந்த ஆய்வுக்கு பின்னர் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மோடி உள்ளிட அம்மாநில தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

 

 

சார்ந்த செய்திகள்