Skip to main content

நட்சலைட்டுகள் மலைகளில் இல்லை நகரங்களில் வசதிகளுடன் பதுங்கியுள்ளனர்-ராஜ்நாத் சிங்

Published on 02/09/2018 | Edited on 02/09/2018

 

rajnath

 

 

 

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி  திட்டம் தீட்டியதாக எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரி அமைப்பை சார்ந்த 5 பேர்  அண்மையில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து காட்டில் மறைந்து இருக்கும் நட்சலைட்டுகள் தற்போது நகரங்களில் பல வசதிகளுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். 

 

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புனேயின் பீமா கோரிகான் பகுதியில் நடந்த கலவரத்திற்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடது சாரித் தலைவர்கள் எனப் பலரின் வீடுகளில் புனே போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள். கோவா, ஹரியாணா, தெலங்கானா, மும்பை, டெல்லி என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள  நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
 

இதில் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், சமூக ஆர்வலர் வெர்நான் கோன்சால்வேஸ், அருண் பெரேரியா, கவுதம் நவ்லகா, தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் சுதா பரத்வாஜ், தெலுங்கு கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

rajnath

 

 

 

இந்த கைது தொடர்பாக  ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 29-ஆம் தேதி  காலை  வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு முறையீடப்பட்டது. ஆனால் 29-ஆம் தேதி  மதியம்தான் விசாரணை எடுக்கப்படும் என்று ஒத்துக்கொள்ளவே அன்று மாலை 4.30 மணி அளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான் வில்கர் மற்றும் நீதிபதி சந்திரா சூடு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் இந்த கைது  ஏற்கதக்கதல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் அவர்கள் 5 பேரையும் 6-ஆம் தேதிவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. 

 

இதனை அடுத்து இந்த கைது சரியானதுதான் என ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்பெல்லாம் நட்சலைட் மற்றும் மாவோயிஸ்டுகள் காடுகளிலும், மலைகளிலும் பதுங்கி வாழ்ந்துவந்தனர் ஆனால் தற்போது நகரங்களில் பல வசதிகளுடன் வாழ்ந்துவருகின்றனர் என கூறினார். மேலும் இந்தியாவில் 120 மாவட்டங்களில் நட்சலைட் ஆதிக்கம் இருந்ததாகவும் தற்போது அது 12 மாவட்டங்களாக குறைந்ததாகவும் அதற்கு காரணம் அவர்கள் நகரங்களில் குடியேறியுள்ளனர் என்றும் கூறினார். நாட்டை துண்டாடுவது போன்ற பெரிய குற்றம் வேறெதுவும் இல்லை ஆனால் தற்போது விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் தெரிவிதிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.