Skip to main content

ரயில் பயணிகளுக்கு கெட்டுப்போன உணவு - ஒரு லட்சம் அபராதம் விதிப்பு!

Published on 13/01/2020 | Edited on 14/01/2020

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்கு ஐஆர்சிடிசி ஒரு லட்சம் அபராதம் விதித்துத்துள்ளது. நாட்டிலேயே அதிவிரைவு ரயிலான தேஜஸ் ரயில் குறிப்பிட்ட இடங்களில் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, மதுரை இடையே இந்த ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் மணிக்கு 130 முதல் 200 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் உடையது. 



இதற்கிடையே கோவாவில் இருந்து மும்பை சென்ற ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டு போய் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த ரயிலில் சென்ற பயணிகள் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். புகாரின் உண்மையை தன்மையை சோதித்த அதிகாரிகள் அதில் உண்மை இருப்பதை கண்டறித்தனர். மேலும், தரமற்ற உணவினை வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் அராதம் விதித்தனர். 

 

சார்ந்த செய்திகள்